<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5150995232087595379</id><updated>2011-07-08T01:51:43.069-07:00</updated><category term='கையறுநிலை'/><category term='காந்தி'/><category term='சோழர் ஆட்சி'/><category term='நாவா'/><category term='வரலாறு. சாதி'/><category term='அண்ணா'/><category term='சமத்துவம்'/><category term='நா.வானமாமலை'/><category term='மார்க்சிய ஆய்வு'/><category term='கல்வி'/><category term='மார்க்சியம்'/><category term='கவிதை'/><category term='கவிதை பெண்நிலை'/><title type='text'>நூலடுக்கு</title><subtitle type='html'>நான் சுவைத்த படைப்புகளை 
பிறர் சுவைக்க 
இந்நூலடுக்கில் வைக்கின்றேன்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://noolatukku.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5150995232087595379/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://noolatukku.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தளிர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>7</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5150995232087595379.post-1281689382605272904</id><published>2010-06-14T09:15:00.000-07:00</published><updated>2010-06-14T09:22:02.949-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை பெண்நிலை'/><title type='text'>சிறை</title><content type='html'>சிரித்தபடிதான்&lt;br /&gt;அனுப்பி வைத்தார்கள்&lt;br /&gt;சிறைச்சாலையாயிருக்குமென&lt;br /&gt;சற்றும் எதிர்பார்க்கவில்லை&lt;br /&gt;விசாரணைகள் விதிவிலக்கு&lt;br /&gt;கம்பிகளும் விலங்குகளும்&lt;br /&gt;கண்களுக்குத் தெரியாதவை&lt;br /&gt;காயங்களும் தழும்புகளும் கூட&lt;br /&gt;சமயங்களில்&lt;br /&gt;விலங்குகள் தளர்த்தப்படும்&lt;br /&gt;உண்பதற்காகவல்ல&lt;br /&gt;உணவாவதற்கு&lt;br /&gt;தப்பித்ததாய்யெண்ணி&lt;br /&gt;ஓடிவந்து கதவு தட்டும்&lt;br /&gt;ஒவ்வொரு முறையும்&lt;br /&gt;ஒப்படைக்கப்படுவேன்&lt;br /&gt;நிர்தாட்சண்யமாய்&lt;br /&gt;தப்பிக்க வேண்டி&lt;br /&gt;விலங்குடைக்கும் முயற்சியில்&lt;br /&gt;விடாப்பிடியாய்&lt;br /&gt;எப்போதும் நான்&lt;br /&gt;- தென்றல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5150995232087595379-1281689382605272904?l=noolatukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://noolatukku.blogspot.com/feeds/1281689382605272904/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5150995232087595379&amp;postID=1281689382605272904&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5150995232087595379/posts/default/1281689382605272904'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5150995232087595379/posts/default/1281689382605272904'/><link rel='alternate' type='text/html' href='http://noolatukku.blogspot.com/2010/06/blog-post_14.html' title='சிறை'/><author><name>தளிர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5150995232087595379.post-8669195548875788069</id><published>2009-02-26T21:40:00.000-08:00</published><updated>2009-02-26T22:01:07.332-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு. சாதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மார்க்சிய ஆய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நா.வானமாமலை'/><title type='text'>தமிழ் நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;நா. வானமாமலை&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;தமிழ் நாட்டின் சமூக வளர்ச்சியில் தொழிற் பிரிவினையால் தொழிலடிப்படைச் சாதிகள் தோன்றின.&lt;a title="" style="mso-endnote-id: edn1" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn1" name="_ednref1"&gt;[i]&lt;/a&gt; அவை பரம்பரைத் தொழில் முறையால் சாதிகளாயின. இவற்றைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில், முன்னரே வடநாட்டில் தோன்றிய வருணாச்சிரமப் பிரிவுகளுக்குள் அடக்க உயர்ந்த வர்க்கங்கள் முயன்றன.&lt;a title="" style="mso-endnote-id: edn2" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn2" name="_ednref2"&gt;[ii]&lt;/a&gt; ஆனால், இதுவோர் மேற்பூச்சாக (Super Imposition) இருந்ததேயன்றிச் சாதிகள் தொழிலடிப்படையிலேயே இருந்தன. ஆனால் தொழில் புரியும் வர்க்கங்களிடையே சமத்துவமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா&lt;br /&gt;செய்தொழில் வேற்றுமை யான்&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் செய்யாத சுரண்டல் வர்க்கத்தினர் இவர்களிடையே சாதி உயர்வு தாழ்வுகளைக் கற்பித்துத் தங்களை உயர்ந்தோரென்றும் உழைப்பாளிகளைத் தாழ்ந்தவரென்றும் கருதினர். தொழில் செய்வோர் ஒன்றுபடாமல் தடுத்து வைத்திருந்தனர். உயர்ந்த சாதியர்களின் நீதி நூல்களும் இதையே நிலைநாட்டின.&lt;br /&gt;&lt;br /&gt;சாதிக் கொடுமைகளும் அநீதிகளும் சாதிக் கருவமும் மிகுந்திருந்த காலத்தில் அடக்கப்பட்டிருந்த சாதியினர் அவற்றை எதிர்த்துப் பல்வேறு விதங்களில் போராடியுள்ளனர். இப்போராட்டங்களில் சாதி உயர்வு தாழ்வுகளை நிலைநாட்டப் பயன்படும் கருத்துக்களையும் தத்துவங்களையும் எதிர்த்துப் பல கருத்துக்களையும் தத்துவங்களையும் உருவாக்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கருத்துக்களில் சில பழைமையான வேத நூல்களிலிருந்து எடுத்து மாற்றியமைக்கப்பட்டன. சில கருத்துக்கள் வரலாற்றின் மாறுதலுக்கேற்பப் புதுமையாகப் படைக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் சாதி சமத்துவத்தை விளக்கும் பல நூல்கள் தோன்றின.&lt;a title="" style="mso-endnote-id: edn3" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn3" name="_ednref3"&gt;[iii]&lt;/a&gt; சாதி அமைப்பு முறையில் தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்டவர்களைப் பற்றி இவை எழுதப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணர்கள் சாதி அமைப்பின் உச்சியிலிருந்ததாலும் அவர்கள் எல்லோரினும் மேம்பட்டவர்கள் என்ற கருத்துக் கொண்ட கதைகளும் புராணங்களும் மிகுந்திருந்ததாலும் 'கீழ்ச் சாதியார்' பிராமணர்களது சிறப்பைத் தாக்குவதன் மூலமும் அவர்களைவிடத் தாங்கள் உயர்வானவர்கள் என்பதை நிலை நாட்டிக்கொள்ள முயன்றனர்.&lt;a title="" style="mso-endnote-id: edn4" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn4" name="_ednref4"&gt;[iv]&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூல்களில் சிலவற்றை இங்கே குறிப்பிடுவோம். வேளாளர் உயர்வைக் கூறும் நூலொன்று 'வருண சிந்தாமணி' என்ற தலைப்போடு 1901இல் வெளியாயிற்று.&lt;a title="" style="mso-endnote-id: edn5" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn5" name="_ednref5"&gt;[v]&lt;/a&gt; இந்நூலாசிரியர் வேதம், உபநிஷத்துக்கள், புராணங்கள் முதலியவற்றை 'ஆரிய வேதம்' என்றும் திருக்குறள், சைவத் திருமுறைகள் முதலியவற்றைத் 'திராவிட வேதம்' என்றும் கூறுகிறார். வேதங்களிலும் திராவிட வேதங்களிலும் சாதிப் பிரிவினைகளுக்கும் உயர்வு, தாழ்வுகளுக்கும் ஆதாரமில்லை என்று குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேதமுண்டான காலத்தில் ஆரியர்கள் ஏற்பாட்டில் சாதி என்பதே கிடையாது. வேதத்தில் சாதியின் குளறுபாட்டிற்கு ஆதரவேயில்லை. அந்தணர்களை மேன்மைப்படுத்தியதற்கும் சூத்திரர்களைக் கீழ்மைப்படுத்தியதற்கும் யாதொரு ஆதரவுமில்லை. சகல வருணத்தாருக்கும் ஒன்று சேர்ந்திருக்கவும் ஒன்றாயிருந்துண்ணவும் ஒருவருக்கொருவர் கொண்டு, கொடுத்திருப்பதற்கும் வேதத்துள் யாதொரு தடையும் தோற்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வேத சூக்தங்களில் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய இந்நால்வரும் ஒருவரைப் போலவே பிரமாவினிடத்து உதித்தவர்களாகவேயிருக்கிறார்கள். இதுவும் வேதத்தில் பூர்வ பாகத்தில் சேர்ந்ததன்று; பின்னிட்டதாம். &lt;a title="" style="mso-endnote-id: edn6" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn6" name="_ednref6"&gt;[vi]&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னர் இவ்வாசிரியர் சைவசமயத் தத்துவத்தை விளக்கி அதைப் பின்பற்றும் சைவர், ஆரிய வேதத்தைப் பின்பற்றும் பிராமணருக்கு மேலானவர் என்று கூறுகிறார். ஆனால், பிற்பகுதியில் நால்வருணப் பிரிவை ஏற்றுக்கொண்டு வேளாளர்கள் தாம் செய்யும் தொழிலால் வைசியர் என்றும் அவர்களுக்கு ஏவல் புரியும் "வண்ணார், நாவிதர், குயவன், தச்சன், கொல்லன், கன்னான், கல்தச்சன், தட்டான், இடையன், செக்கான், சேணியன், சாணன், எருத்து வாணியன், தேவதாசி மக்கள், வேடன், பக்கிலியன்"&lt;a title="" style="mso-endnote-id: edn7" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn7" name="_ednref7"&gt;[vii]&lt;/a&gt; போன்ற பற்பல தொழிலாளிகள் சூத்திரர்கள் என்றும் கூறுகிறார். இவ்வாறு வேளாளர், சைவ சமயத்தாராதலால், வேத சமயத்தைப் பின்பற்றும் பிராமணரிலும் மேம்பட்டவரென்றும் தொழிலால் வைசியரென்றும் சூத்திரர் அவர்களுக்குத் தாழ்ந்தவர்களென்றும் இந்நூல் கூறுகிறது. இக்கருத்துக்களின் முரண்பாடு எளிதில் விளங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டின் நிலப்பிரபுக்கள், சிறு நிலவுடைமையாளரில் பலர் சைவ வேளாள சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தமக்கு மேலுள்ள வகுப்பாரோடு தங்களைச் சமமானவர்களாகவும் கீழுள்ளவர்களைத் தங்களுக்குத் தாழ்ந்தவர்களென்றும் கருதி அவர்களை அவ்வாறே வைத்திருக்கவும் விரும்பினார்கள் என்பதை இந்நூல் காட்டும். எனவே, இவர்கள் சாதி அமைப்பு முறையை எதிர்க்கவில்லை. அதில் தங்களுடைய பதவியை உயர்த்திக்கொள்ளவே விரும்பினார்கள். இதற்காகத் தமிழ் நூல்களையும் வேதங்களையும் பயன்படுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய இதே காலத்தில் (1904) பனையேறும் தொழிலாளர்களின் சாதியில் தோன்றி, கள்ளுக்கடைக் குத்தகையெடுக்தும் வியாபாரம் செய்தும் செல்வம் திரட்டிய கிராமணிகள் தங்கள் சாதி உயர்ந்ததென்று நிலைநாட்ட 'க்ஷத்திரியகுல விளக்கம்' &lt;a title="" style="mso-endnote-id: edn8" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn8" name="_ednref8"&gt;[viii]&lt;/a&gt; என்ற நூலை வெளியிட்டார்கள். அந்நூலில் வருணப் பிரிவுகளை ஏற்றுக்கொண்டு தாங்கள் சூத்திரர்கள் அல்லரென்றும் க்ஷத்திரியர்களென்றும் சொல்லிக்கொண்டார்கள். க்ஷத்திரியர்களான ஜனகன் முதலியவர்களிடமிருந்துதான் பிராமணர்கள் பிரம்மஞானம் என்ற உயர்ந்த அறிவைப் பெற்றார்களென்றும் எனவே க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்குக் குருமுறையாவார்கள் என்றும் அந்நூல் கூறுகிறது. பழந்தமிழ் நூல்கள் கூறும், கள் விற்போர் தாமல்லரென்றும் படைத் தலைமையே தமது தொழில் என்றும் அந்நூலாசிரியர் கூறுகிறார். உழைப்பவர், பெருமையுடையவரல்லர், கீழ்ச்சாதியார் என்னும் கூற்றை இந்நூல் மறுக்கவில்லை. கீழ்ச்சாதி என்று கருதப்பட்டவர்களில் செல்வர்களாகிவிட்டவர்கள் தங்கள் சாதிக்கு உயர்வு கற்பிக்கச் செய்த முயற்சியாகவே இந்நூலின் கருத்துக்கள் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னாட்டு நாடார்களுடைய உயர்வைக் கூறும் ஒரு நூல் 1937இல் வெளியிடப்பட்டது. அது 'நாடார் மன்னரும் நாயக்க மன்னரும்'&lt;a title="" style="mso-endnote-id: edn9" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn9" name="_ednref9"&gt;[ix]&lt;/a&gt; என்பது. இந்நூலாசிரியர்கள் வேதங்களையும் புராணங்களில் கூறப்படும் வருணப் பிரிவினையையும் ஒதுக்கிவிட்டுத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் 'சான்றோர்' என்னும் சொல் தம் சாதியையே குறிக்கும் என்று கொண்டு தமது மேன்மையை நிலைநாட்ட முயன்றுள்ளார்கள். தமது தொழில் கள்ளிறக்குதல் இல்லையென்றும் பொதி மாட்டு வணிகமே என்றும் கூறுகின்றனர். இத்தொழில்களில் முதலாவதைப் பெரும்பான்மையான ஏழை நாடார்கள் செய்து வந்தனர். இச்சாதியினரில் ஒரு சிறு பகுதியினர் வணிகமும் செய்து வந்தனர். அச்சிறு பகுதியினரின் கருத்துக்களையும் ஆர்வங்களையுமே இந்நூல் வெளியிடுகிறது. அவர்கள் தம்மையே பாண்டியர் மரபினர் என்றழைத்துக் கொண்டனர். நாயக்கர்கள் தங்கள் முன்னோர்களிடமிருந்து நாட்டைக் கவர்ந்து கொண்டதாக இவர்கள் சொல்லுகிறார்கள். இவர்கள் மிகவும் தாழ்ந்த சாதியினரென்று கருதப்பட்டதால் இவர்கள் தங்களோடு ஒத்தவர்களையும் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் கவர்ந்துகொள்ளப் பல கருத்துக்களை உருவாக்கினர். நூலின் முகவுரையில், "இந்நூல் ஜாதி சம்பந்தமான நூல். ஜாதியெனவொன்று தோன்றிய காலத்திலிருந்தே அதனை அடியோடழிக்கும் கிளர்ச்சியும் தோன்றிவிட்டது. கபிலரகவல் இதற்குச் சான்று பகரும்" என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஆயினும் இவர்களும் தங்கள் சாதி உற்பத்தியைக் கூறுமிடத்துப் புதிய கதைகளைப் புனைந்து கொண்டு தமக்குச் சிறப்புத் தேடிக்கொள்ள முயன்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடார் திருமண வாழ்த்துக்கள் என்னும் நாட்டுப்பாடல்களில் இத்தகைய கதைகளைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. உயர்ந்த சிங்கக் கொடியாதிபதி,&lt;br /&gt;சம்பரனை வென்று இரட்டைச் சங்கேந்தினோன்,&lt;br /&gt;ஈழம் திறை கொண்டோன்,&lt;br /&gt;இலங்காபுரி வேந்தன்,&lt;br /&gt;செட்டி தோளேறும் பெருமாள்,&lt;br /&gt;வாழைக் கிருதலை வரக்கண்டேன்,&lt;br /&gt;பத்திரகாளி வரபுத்திரன்.&lt;a title="" style="mso-endnote-id: edn10" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn10" name="_ednref10"&gt;[x]&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. பஞ்சதிராவிட முதல்வன்,&lt;br /&gt;பரம்பரைப் பாண்டிய நாடன்,&lt;br /&gt;கல்விச் சங்கமுடையவன்,&lt;br /&gt;காசு முத்திரை விடுத்தவன்,&lt;br /&gt;சபத கன்னி புத்திரன்,&lt;br /&gt;தமிழைக் குறுமுனிக் குரைத்தவன்.&lt;a title="" style="mso-endnote-id: edn11" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn11" name="_ednref11"&gt;[xi]&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் குலத்தின் உயர்வை இவ்வாறு இப்பாடலில் அவர்கள் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பரனை வென்றவன் தசரதன், ஈழத்தை வென்றவன் இராமன். இலங்காபுரி வேந்தன் இராவணன். இவ்வாறு புராணக் கதைகளிலிருந்து தங்கள் குலமுதல்வர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். 'பத்திரகாளி வரபுத்திரன்', 'சப்தகன்னி புத்திரன்' என்பது வலங்கையர் சரிதம் என்னும் நாட்டுப் பாடலில் காணப்படும் செய்தி. சப்த கன்னியர்களுக்கு சத்தி முனியின் ரிஷிகர்ப்பமாகப் பிறந்தவர்கள் வலங்கையர். அவர்களை வளர்த்துக் கல்வி கற்பித்தவள் பத்திரகாளி. இனித் தாங்கள் அரச பரம்பரையினர் என்று சொல்லிக் கொள்வதற்காகப் 'பரம்பரைப் பாண்டிய நாடன்' என்றும் இப்பாடலில் குறிப்பிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் பரதவர்களின் உயர்வைப் பாடும் நூலொன்று 1909இல் வெளியாயிற்று. அதன் தலைப்பு 'பரவர் புராணம்'.&lt;a title="" style="mso-endnote-id: edn12" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn12" name="_ednref12"&gt;[xii]&lt;/a&gt; எழுதியவர் கத்தோலிக்கர் ஆயினும் இந்துப் புராணக் கதைகளை ஒப்புக்கொண்டு தங்கள் சாதியாருக்கு அரசவம்சத்தில் உயர்ந்த பதவியைப் பெறப் புதுக்கதைகளை இந்நூல் படைக்கிறது. இந்நாட்டிற்கு இந்துமதம் வந்த வரலாற்றைக் கூறிச் சாதியைப் பிராமணர்கள் ஏற்படுத்தியதாகவும் கூறுகிறது. பின்னர் ஆரியகுல, சந்திரகுல மன்னவர் வரலாற்றைப் புராணம் கூறும் முறையிலேயே சொல்லி வந்து சந்திரன், புதன், புருரூவன், அவனுக்கு ஊர்வசியின் வயிற்றில் பிறந்தவன் ஆயு, நகுக்ஷன், யயாதி என்று தந்தை மகன் வரிசையில் சந்திரகுல மன்னர் பரம்பரை வரலாற்றை இந்நூல் கூறுகிறது. யயாதிக்குப் பல மனைவியரிருந்தனர். அவர்களுள் ஒருத்தி பார்ப்பனியான தேவயானை. அவளுடைய மக்களிருவர் தந்தை சொல்லை மீறியதால் சாபமடைந்து வேடராயினர். அசுரப் பெண்ணான சன்மிஷ்டையின் மக்கள் தந்தையின் கோபத்துக்காளாகிச் சாபம் பெற்றுக் கள் விற்கப் போயினர். இவனுக்கிளையவன், அண்ணனைப் போலவே சாபம் பெற்று மீன் பிடிக்கப் போனான். இவர்களே பரதவர்கள். ஆண் வழியில் இவர்கள் குலத்தவனே பிறகாலத்தில் பாரதம் முழுவதையும் ஆண்ட பரதன் என்று இந்நூல் கூறும்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திர வம்சத்தில் தோன்றிய அர்ச்சுணன், பரதகுல மன்னன் மகள் சித்திராங்கதையை மணந்து, பாண்டிய வம்சம் தோன்றிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பண்டைக்கால இதிகாச மன்னர்களோடு தங்களைத் தொடர்புபடுத்திக்கொண்டு ஒரு புதிய புராணத்தை இந்நூலாசிரியர் இயற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னர் 1535-37இல் பரதவர் கிறிஸ்தவரானதும் போர்த்துக்கீசியர் உதவி பெற்று முத்துச் சலாபம் நடத்தியதும் அவர்கள் உதவியால் தங்களுக்குள் ஒரு சாதித் தலைவரை ஏற்படுத்திக்கொண்டு, அவரையே 'பரத பாண்டியர்' என்னும் பெயரோடு ஆளுகையற்ற அரசராகக் கொண்டதும் அவரது வம்ச பரம்பரை விவரங்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் பரதவர் சாதிச் சிறப்புக்கு அவர்கள் செல்வர்களது சிறப்பே காரணம் என்ற கருத்தே வலியுறுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கார்காத்தார் சாதி உயர்வு கூறும் 'கிளைவளப்ப மாலை'யும் கார்காத்தார் தோற்றத்திற்குரிய புதுப் புராணக் கதைகளைக் கூறி, கடந்த 400 ஆண்டுகளில் அவர்கள் குலத்தவரில் மேன்மை பெற்று விளங்கிய வட மலையப்ப பிள்ளையன் போன்றவர்களின் வரலாறுகளையும் சொல்லுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளர்கள் தம்மை இந்திரகுல வேளாளர் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் இந்திரலோகத்தில் இருந்து நெல்லும் கரும்பும் கொண்டு வந்தவர்கள் என்றும் இதனால் பாண்டிய மன்னனால் சிங்காதனத்திலிருத்திப் பாராட்டப் பட்டவர்களென்றும் அவர்களுடைய சாதி வரலாறுகள் கூறுகின்றன.&lt;a title="" style="mso-endnote-id: edn13" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn13" name="_ednref13"&gt;[xiii]&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இக்கதைகளுக்கெல்லாம் பொதுவான சில அம்சங்கள் உள்ளன. அவற்றைச் சற்றுக் கூர்ந்து நோக்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூல்கள் யாவும் அவ்வச்சாதியில் செல்வமுடையவர்களால்தான் எழுதுவிக்கப்பட்டன. எனவே, அவர்கள் தங்களுக்கு ஓர் உயர்வான தோற்றுவாயைப் பண்டைக் கால நூல்களில் காண முயன்றார்கள். அல்லது அவற்றோடு தொடர்புகொள்ளும் முறையில் புதிய நூல்களை எழுதி உயர்வை ஏற்படுத்த முயன்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நில உடைமையாளர்கள் மிகுதியாயிருந்த சாதிகள், ஆரிய வேதம் வேறு என்றும் திராவிட வேதம் வேறு என்றும் கூறித் தங்களுக்குத் திராவிட வேதத்தில் உயர்ந்த பதவியிருப்பதாக நிலைநாட்ட முயன்றன. தாங்கள் சுகவாழ்க்கை வாழ்வதற்காக உழைப்பதற்குத் தொழிலாளிகள் தேவையாதலால் வருணாசிரம முறையையும் ஒப்புக்கொண்டு, தங்களை வைசியர் எனவும் தொழில் செய்து வாழ்வோரைச் சூத்திரர் எனவும் அவர்கள் தங்களிலும் தாழ்ந்தவர்கள் என்றும் எழுதினார்கள். ஆனால் மேலுள்ளவர்களுக்குத் தாங்கள் சமம் என்று காட்ட வைசியன் ஆட்சிக்கு வரலாம் என்று கூறும் கருத்துக்களைப் பிற்கால வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடார்கள் பழைய புராணங்களிலிருந்து தங்கள் சாதியின் உயர்வைக் காட்ட ஆதாரம் எதுவும் கிடைக்காததால் தமிழ் நூல்களில் காணப்படும் 'சான்றோர்' என்னும் சொல் தம்மையே குறிக்கிறதென்று கூறினர். புதிய புராணங்களைப் புனைந்து தம்மை அரச மரபினரென்றும் தாங்கள் வைசியருக்கும் பிராமணருக்கும் உயர்ந்தவர்களென்றும் சொல்லிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுடைய கருத்துக்களனைத்தும் பிராமணர்கள் உயர்ந்த சாதியினர் என்பதை மறுக்கின்றன. அவ்வாறு கூறும் புராணக் கருத்துக்களையும் மறுக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுடைய நூல்கள் வருணாசிரமப் பிரிவுகளை எதிர்க்கவில்லை. அதில் தங்களுக்களிக்கப்பட்ட தாழ்ந்த ஸ்தானத்தைத்தான் மறுக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வேளாளர் நூலான வருண சிந்தாமணியைத் தவிர, மற்ற சாதி வரலாற்று நூல்கள் வேதங்களை ஒப்புக்கொள்ளுகின்றன. சாதி சமத்துவத்திற்கும் அவற்றை ஆதாரமாகக் காட்டுகின்றன. வருண சிந்தாமணிகூட வேதங்களில் சாதிப் பிரிவினைக்கு ஆதாரமில்லை என்று ஒப்புக்கொள்ளுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புராணங்களையும் மனுஸ்மிருதியையும் மறுக்கும் சாதி வரலாற்று நூல்கள் வேதத்தை மட்டும் ஒப்புக் கொள்ளுகின்றன. இதற்குக் காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;வேதப் பாடல்களில் பல, வருணாச்சிரம முறை தோன்றுவதற்கு முன் தோன்றியவை; முக்கியமாக ரிக்கு வேதத்தின் முதல் பகுதி, ஆரியர் கால்நடை வளர்க்கும் இனக்குழுக்களாக (Pastoral tribes) வாழ்ந்தபொழுது தோன்றிய கூட்டு வணக்கப் பாடல்கள்.&lt;a title="" style="mso-endnote-id: edn14" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn14" name="_ednref14"&gt;[xiv]&lt;/a&gt; அக்காலத்தில் வர்க்கப் பிரிவுகளோ, சாதிப் பிரிவுகளோ இருந்ததில்லை. எனவே, குழுவிலுள்ள யாவரும் சமமாகவே வாழ்ந்தனர். அவர்கள் அனைவரும் இயற்கைச் சக்திகளான தேவர்களுக்கு வணக்கம் செலுத்தினார்கள். இப்பாடல்களில் சாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றி எதுவும் காணப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புராணங்களையும் மனுஸ்மிருதியையும் இச்சாதி வரலாறுகள் எதிர்க்கின்றன. இது ஏன்? வர்க்கப் பிரிவினைகள் ஏற்பட்டு, வருணாசிரமம் தோன்றி, சாதிப் பிரிவுகளை நிலைப்படுத்தி வைக்க உயர்ந்த வர்க்கத்தினருக்கு அவசியம் ஏற்பட்ட காலத்தில் புராணங்களும் மனுஸ்மிருதியும் தோன்றின. இவற்றின் நோக்கம் சாதி உயர்வு, தாழ்வுகளுக்கு நியாயம் கூறுவதும் அதனைச் சட்ட பூர்வமாக்கும் விதிகளை வகுப்பதுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நோக்கத்தை நிறைவேற்றப் புராணங்களையும் இரண்டாவது நோக்கத்தை நிறைவேற்ற மனுஸ்மிருதியையும் உயர் வர்க்கத்தினர் எழுதினர். இதனால்தான் சாதி சமத்துவம்கோரும் சாதியினர் அந்நூல்களின் கருத்துக்களை எதிர்த்தனர். இதனால்தான் சாதி சமத்துவம் கோரும் சாதியினர் அந்நூல்களின் கருத்துக்களை எதிர்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணர்களோடு தாங்கள் சமமானவர்கள் என்று நிரூபிக்க அவர்கள் வேதங்களையே ஆதாரமாகக் கொண்டனர். புராணங்களை எதிர்ப்பதற்கு இரண்டு விதமான ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொண்டனர். ஒன்று: புராணங்களிலுள்ள முரண்பாடுகளையும் ஒரு புராணத்தின் கருத்து மற்றொன்றிற்கு எதிராக இருப்பதையும் இவர்கள் எடுத்துக்காட்டினார்கள். மற்றொன்று: புராணக் கருத்துக்களை எதிர்க்கும் பௌத்த நூலான மணிமேகலையையும்&lt;a title="" style="mso-endnote-id: edn15" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn15" name="_ednref15"&gt;[xv]&lt;/a&gt; சைவ நூலான நீலகேசியையும்&lt;a title="" style="mso-endnote-id: edn16" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn16" name="_ednref16"&gt;[xvi]&lt;/a&gt; தங்களுக்குத் துணையாகக் கொண்டார்கள். பெயர் குறிப்பிடாவிட்டாலும் வருண முறையில் பிராமணன் உயர்ந்தவன் என்ற கருத்தைப் பல ரிஷி மூலங்களை வெளிப்படுத்துவதன் மூலம் மறுக்கும் மணிமேகலை, நீலகேசிக் கருத்துக்கள், சாதி வரலாற்று நூலாசிரியர்களுக்கு வலுவளித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றிற்கெல்லாம் மேலாக 18ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தோன்றிய 'கபிலரகவல்' என்ற பாடல்&lt;a title="" style="mso-endnote-id: edn17" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn17" name="_ednref17"&gt;[xvii]&lt;/a&gt; இவர்களுக்குப் பெருந்துணையாக இருந்தது. இப்பாடல் பிறப்பால் உயர்வு, தாழ்வு இல்லை என்னும் கருத்துடையது. ஆதி என்னும் புலைச்சிக்கும் பகவன் என்னும் பார்ப்பனனுக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். அவர்களே கபிலர், வள்ளுவர், ஔவை, அதியமான், உறுவை, வள்ளி, உப்பை முதலிய எழுவர். அவர்களில் கபிலர் அந்தணர் குலத்திலும் வள்ளுவர் பறையர் குலத்திலும் ஔவை பரணர் குலத்திலும் அதியமான் அரசர் குலத்திலும் வள்ளி குறவர் குலத்திலும் உப்பை வண்ணார் குலத்திலும் உறுவை நாடார் குலத்திலும் வளர்ந்தனர். எக்குலத்தில் வளர்ந்தபோதிலும் மேன்மையடைந்து மக்களால் போற்றப்பட்டனர். சாதியினால் உயர்வு, தாழ்வு இல்லை. கல்வி முதலிய தன்மைகளாலேயே உயர்வு, தாழ்வு உண்டாகிறது என்ற கருத்தை இப்பாடல் வலியுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனோடு சித்தர் பாடல்களும் திருமூலர், திருமந்திரமும் இவர்களது சாதி சமத்துவக் கருத்துப் போராட்டத்திற்குத் துணை செய்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சாதி யென்ப தேதடா?&lt;br /&gt;சமய மென்ப தேதடா?&lt;br /&gt;&lt;br /&gt;என்பது போன்ற சித்தர் பாடல்கள், சாதியில் தாழ்த்தப்பட்டோருக்குப் போர் முழக்கமாக ஒலித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக அவர்கள் வடமொழியிலும் தமிழ் மொழியிலும் உள்ள நூல்களில் ஆதாரங்கள் திரட்டிப் பன்முகமான கொள்கைகளை வகுத்து, சாதி உயர்வு தாழ்வுகளை எதிர்த்துபூ போராடக் கருத்துக்களையும் கொள்கைகளையும் உருவாக்கிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சாதி சமத்துப் போராட்டத்திற்காக எழுதப்பட்ட ஒரு நூல் அண்மையில் எனக்குக் கிடைத்தது. இதன் தலைப்பு 'சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு' &lt;a title="" style="mso-endnote-id: edn18" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn18" name="_ednref18"&gt;[xviii]&lt;/a&gt; என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூலில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதல் பகுதி 'பஞ்சாங்கம் குண்டையனுக்கும் மார்க்கசகாயம் ஆசாரிக்கும் நடந்த சம்வாதம்.' இரண்டாம் பகுதி 'மார்க்கசகாயம் ஆசாரி முதலிய வாதிகளுக்கும் குண்டையன் முதலிய பிரதிவாதிகளுக்கும், சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வாதிகளது வாக்குமூலமும் நீதிபதி அளித்த தீர்ப்பும்.'&lt;br /&gt;&lt;br /&gt;'விசுவப் பிரம்மகுலம்' என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஆசாரிமார், பஞ்ச கருமிகள் என்போர் நெடுங்காலமாகச் சாதி ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானவர்கள். சோழர் காலத்தில் "பஞ்சகருமார்களோடு வலங்கை சாதியார் உடன் கூட்டம் கூடாது" என்று முடிவு செய்ததாகப் பல சாசனங்கள் கூறுகின்றன.&lt;a title="" style="mso-endnote-id: edn19" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn19" name="_ednref19"&gt;[xix]&lt;/a&gt; 'உடன் கூட்டம்' என்றால் ஒரே தெருவில் வசிப்பது, விழாக்களில் கலந்துகொள்ளுவது, ஊர்க் கூட்டங்களில் பங்கு கொள்ளுவது முதலியன. தற்காலத்தில் 'சாதி விலக்கு' என்பதுபோல இத்தண்டனை 'ஊர்விலக்கு' ஆகும். பஞ்சகருமார் இடங்கைச் சாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் தொழிலாளிகள். இவர்களுக்கு நிலச்சுவான்கள் செய்த அநீதிகளைப் பற்றி ஒரு சாசனம் கூறுகிறது. இடங்கைச் சாதிகள் தொண்ணூற்றாறும் ஒன்று சேர்ந்து நின்று இந்த அநீதிகளை எதிர்க்கத் தீர்மானித்ததாக அதே சாசனம் கூறும்.&lt;a title="" style="mso-endnote-id: edn20" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn20" name="_ednref20"&gt;[xx]&lt;/a&gt; தொடர்ந்து இத்தொழிலாளிகள் உயர்ந்த சாதியினரின் கொடுமைகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அவ்வரலாற்றை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமன்று.&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சகருமார் என்பவர்கள் இருப்புத் தொழில் (கொல்லர்), தச்சுத் தொழில் (தச்சர்), கல் தொழில் (கல் தச்சர்), செப்புத் தொழில் (கன்னார்), தங்கத் தொழில் (தட்டார்) என்று ஐந்து தொழில்களைச் செய்பவர்கள். ஆனால் இவர்கள் கொள்வினை, கொடுப்பு வினையும் கூடியுண்ணும் உரிமைகளும் உடைய ஒரே சாதியினர். இவர்கள் தனித்தனி தொழில் செய்து வாழ்ந்து வந்தனர். கொல்லர்கள் ஏர்முனையும் வாள்முனையும் கதிர்முனையும் எழுத்தாணி முனையும் செய்து உழவர்களுக்கும் வீரர்களுக்கும் படிப்பாளிகளுக்கும் கருவிகள் வழங்கி உதவினர். தச்சர்கள் மரச்சாமான்களும் வீடு கட்டுவதற்குரிய மரப்பொருள்களும் செய்து எல்லாச் சாதியினருக்கும் உதவி புரிந்தனர். சிற்பாசாரிகள் அல்லது கல் தச்சன் அல்லது ஸ்தபதி, மாளிகைகள், கோயில்கள் கட்டிக் கலையை வளர்த்தனர். பொற்கொல்லர்கள் ஆபரணங்களும் நாணயங்களும் மாங்கல்யமும் செய்து நாகரிக வாழ்க்கைக்கும் வாணிக வளர்ச்சிக்கும் துணை புரிந்தனர். கன்னார்கள் செம்பில் பாத்திரங்களும் கருவிகளும் செய்து சமுதாய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை எல்லாச் சாதியினருக்கும் அளித்தனர். இவர்களனைவரும் சமுதாயத்திற்குத் தேவையான உழைப்பை, சமுதாயத்திற்கு அளித்து வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மேல் சாதியார் இவர்களைத் தங்களுக்கு ஊழியம்புரியும் கடப்பாடுடைய சூத்திரர்களாக மதித்தனர். உழைப்பை இழிவாகக் கருதிய பிராமணரும் பிறருழைப்பில் வாழும் நிலக்கிழார்களும் இவர்களைத் தங்களுக்கு அடிமைகளாக உழைப்பதற்காகவே பிறந்து வாழ்வதாகக் கருதினர்.&lt;a title="" style="mso-endnote-id: edn21" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn21" name="_ednref21"&gt;[xxi]&lt;/a&gt; அதற்காகவே பல கருத்துக்களை உருவாக்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;உழைப்பாளிகளான பஞ்சகருமார்கள் இக்கொடுமைகளை எதிர்த்தனர். பல விதங்களில் அநீதியை எதிர்த்துசூ சாதி சமத்துவத்திற்காகப் போராடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போராட்டங்களின்போது கருத்துக்களையும் கொள்கைகளையும் பழைமையான சாதி சமத்துவச் சிந்தனைகளிலிருந்தும் புதுமையான தருக்கங்களிலிருந்தும் உருவாக்கிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குறிப்பிட்ட வழக்கு, ஆசாரிகள் குலத்தில் திருமணத்தை நடத்தி வைக்க பிராமணர்களுக்கு உரிமையுண்டா அல்லது ஆசாரிகள் குலத்தைச் சேர்ந்த பெரியவர்களுக்கு உரிமையுண்டா என்ற பிரச்சினை பற்றி எழுந்தது. இதனைப் பற்றிச் 'சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு' என்ற நூல் பின்வருமாறு கூறுகிறது:&lt;br /&gt;&lt;br /&gt;சித்தூர் ஜில்லாவைச் சேர்ந்த சதுர்ப்பேரியில் விஸ்வப் பிரம்ம வம்சத்தில் பண்டிதர் மார்க்க சகாயம் ஆசாரி முதலியவர்கள் நடத்துகிற விவாகஸ்தம்பப் பிரதிஷ்டை வைபவத்தில் பஞ்சாங்கம் குண்டையன் முதலான விப்பிராள் கும்பல் கூடி வந்து ஆட்சேபணை செய்தார்கள். அவன் போதனைக்குட்பட்டு வந்த புத்திமான்கள், இந்தப் பஞ்சாங்கக் குண்டையனை நீக்கி நீங்கள் வேத விதிப்படி விவாகஞ் செய்ய யத்தனித்தபடியால் இந்தப் பஞ்சாங்கக் குண்டையன் கேட்கிற கேள்விகளுக்கு நீங்கள் வேத சுருதிப் பிரமாணப் படிக்கு உத்திரவு கொடுத்து உங்களினத்தில் உபாத்தியாயரை வைத்து விவாகஞ் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் மேற்படி குண்டையனைக் கொண்டு விவாகம் நடத்திக்கொள்ளவேண்டும் என்று சொன்னதன பேரில் பஞ்சாங்கக் குண்டையனுக்கும் மார்க்க சகாயம் ஆசாரிக்கும் பஞ்சாயத்தார் முன்னிலையில் சம்வாதம் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டையன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மார்க்க சகாயம் ஆசாரி வேதப் பிரமாணமாக விடை கூறினார். இந்த உரையாடலே நூலின் முதல் பகுதியாகும். அவ்வுரையாடலில் மார்க்கசகாயம் ஆசாரி கூறும் விவாதங்களின் சாரம் பின்னால் வரும் கோர்ட்டு வாக்குமூலத்தில் காணப்படுவதால் அவற்றை இங்கு கூறாமல் விட்டுவிடுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்க சகாயம் ஆசாரி கூறிய விவாதங்களைக் கேட்டு, பஞ்சாயத்தார் அவர் பக்கமே தீர்ப்பளித்தார்கள். அத்தீர்ப்பில்,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பண்டிதல் மார்க்க சகாயம் ஆசாரி உங்கள் புராணங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல் யாவருக்கும் நன்றாக விளங்கும்படி உம்மிடத்தில் தர்க்கித்ததற்கு மறுமொழி சொல்ல வகையில்லாமல் நீர் பிரமை கொண்டது யாவருக்கும் நன்றாய்த் தெரிந்திருப்பதால் இனி விஸ்வப் பிரம்ம வம்சத்தார் வேத விதிப்படி விவாக முடிப்பதற்கு இந்தப் பஞ்சாங்கக் குண்டையன் முதலியோர் யாதொரு தடங்கல் செய்யக் கூடாதென்று&lt;br /&gt;&lt;br /&gt;முடிவு செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டையனும் அவனைச் சேர்ந்த சிலரும் இத்தீர்ப்பை ஒப்புக்கொள்ளாமல் அடிதடிச் சண்டை செய்தார்கள். இது குறித்து மார்க்க சகாயம் ஆசாரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பிராது செய்தார். இவ்வழக்கு சாட்சிகளால் ருசுவானபடியால் குண்டையனுக்கும் அவனைச் சார்ந்தோருக்கும் மாஜிஸ்திரேட் அபராதம் விதித்தார். விவாக நஷ்டத்தைப் பற்றிச் சிவில் கோர்ட்டில் பிராது கொடுக்கும்படியும் உத்திரவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறே 1814இல் மார்க்கசாகயம் ஆசாரி முதலியோர் சித்தூர் ஜில்லா அதலாத்துக் கோர்ட்டில் பிராது கொடுத்தார்கள். அவர்களுடைய வாதங்களும் குண்டையன் முதலிய பிரதிவாதிகளின் மறுமொழியும் கோர்ட்டுத் தீர்ப்பில் விவரமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால் அத்தீர்ப்பு முழுவதையும் இங்கே தருவோம். முதல் பகுதியில் காணப்படும் மார்க்க சகாயம் ஆசாரி - குண்டையன் சம்வாதம், இத்தீர்ப்பில் வாதி - பிரதிவாதிகளுடைய விவாதங்களின் விளக்கமாகவே இருப்பதால், இத்தீர்ப்பில் விடுபட்டுப் போன அம்சங்களை மட்டும் பின்னர் காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;விஸ்வப்பிரம்ம வம்மிசத்தாரை சுபாசுபங்களைக்&lt;br /&gt;குறித்து வேத விதிப்படி செய்வதை விப்பிராள்&lt;br /&gt;தடங்கல் செய்ய கூடாதென்று&lt;br /&gt;&lt;br /&gt;சித்தூர் ஜில்லா&lt;br /&gt;அதலாத்துக் கோட்ர்டுத் தீர்ப்பு&lt;br /&gt;&lt;br /&gt;1814ஆம் வருஷத்திய அசலுக்குச் சரியான நகல்.&lt;br /&gt;அசல் நவம்பர் 205, 1818இல் தீர்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;வாதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;சதுப்பேரியிலிருக்கும்&lt;br /&gt;வெள்ளை ஆசாரியார்&lt;br /&gt;மார்க்கசகாயம் ஆசாரியார்&lt;br /&gt;ருத்திர ஆசாரியார்&lt;br /&gt;வெங்கிடாசல ஆசாரியார்&lt;br /&gt;நல்லா ஆசாரியார்&lt;br /&gt;குழந்தை ஆசாரியார்&lt;br /&gt;சின்னக்கண்ணு ஆசாரியார்&lt;br /&gt;அருணாசல ஆசாரியார்&lt;br /&gt;மகாதேவ ஸ்தபதியார்&lt;br /&gt;தக்ஷிணாமூர்த்தி ஸ்தபதியார்&lt;br /&gt;வரத ஆச்சாரியார்&lt;br /&gt;&lt;br /&gt;வக்கீல்- அப்துல் சாயபு&lt;br /&gt;&lt;br /&gt;வாதிகள் பக்கம் தஸ்தாவேசுகள் வேதசாத்திரங்கள் விபரம் உள்நம்பர் 1இல்&lt;br /&gt;&lt;br /&gt;a) எசுர் வேதம்&lt;br /&gt;b) புருஷசூக்தம்&lt;br /&gt;c) மூலஸ்தம்பம்&lt;br /&gt;d) வச்சிரசூசி&lt;br /&gt;e) வேமநபத்யம்&lt;br /&gt;f) கபிலரகவல்&lt;br /&gt;g) ஜில்லா மாஜிஸ்டிரேட் டைரி தாக்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதிவாதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;சதுர்ப்பேரியிலிருக்கும்&lt;br /&gt;பஞ்சாங்கக் குண்டையன்&lt;br /&gt;அருணாசல ஐயன்&lt;br /&gt;வெங்கடசப்பு சாஸ்திரி&lt;br /&gt;விஸ்வதி சாஸ்தரி&lt;br /&gt;தொட்டாசாரி&lt;br /&gt;எக்கிய தீட்சிதர்&lt;br /&gt;வியாச பட்டர்&lt;br /&gt;சூரிய நாராயண சாஸ்திரி&lt;br /&gt;ஜோசி சாஸ்திரி&lt;br /&gt;வந்தவாசி சிரஸ்தாரய்யர்&lt;br /&gt;&lt;br /&gt;வக்கீல் - அருணாசல முதலி&lt;br /&gt;&lt;br /&gt;பிரதிவாதிகள் பக்கம் தாஸ்தாவேசுகளாகத் தாக்கல் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணை சாட்சிகள்&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டியப்ப முதலி&lt;br /&gt;சங்கரநாராயண செட்டி&lt;br /&gt;கோபி செட்டி&lt;br /&gt;அப்பாசாமி பிள்ளை&lt;br /&gt;வெங்கடசுப்பு நாயக்கன்&lt;br /&gt;&lt;br /&gt;வாதிகள் பிராது&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சமுகப் பிரம்மாவினுடைய சத்தியோ ஜாலமுகத்தில் ஸாநகரிஷியும் வாமதேவ முகத்தில் ஸநாதனரிஷியும் அகோர முகத்தில் அபுவநஸரிஷியும் தற்புருஷமுகத்தில் பிரத்நஸரிஷியும் ஈசாந முகத்தில் ஸூபர்நஸரிஷியும் இந்த ஐந்து பேரும் பஞ்சமுகத்தில் உற்பவித்த பிரம்ம ரிஷிகளின் வம்சஸ்தர்களாகிய தாங்களே பிராமணாளென்று பாத்தியஞ் சுருதி வாக்கியப் படிக்கும் வழக்கப்படிக்கும் தங்களில் 1, 2, 3 வாதிகளுடைய வீட்டில் விவாக முகூர்த்தங்கள் நடக்கும் பொருட்டாய் தாங்களனைவரும் யத்தனப் பட்டுக்கொண்டிருக்கையில் சங்கர சாதிகளான பிரதிவாதிகள் துராக்கிருதமாய் பிரவேசித்து, தாங்களே வேதோக்தப் பிரகாரம் நடப்பிவிக்கக் கூடாதென்றும், புராணோக்தமாய், தாங்களே நடத்தி வைக்கிறதாயும், சொல்லித் தாங்கள் கும்பல் கூடி அடித்து விவாக முகூர்த்தம் நிறைவேறாமல் தடங்கல் செய்து போட்டதாயும், அது சங்கதிகளைக் குறித்து மேற்படி ஜில்லா மாஜிஸ்திரேட்டுத் துரையவர்களிடத்தில் தாங்கள் பிரியாது கொடுத்ததற்கு அவர்களை விசாரணை செய்து பிரதிவாதிகளுக்குத் தகுமான தண்டனை கொடுத்து நஷ்டத்தைக் குறித்து ஜில்லாவில் பிராது செய்து கொள்ளும்படியாய் டைரி நகல் கொடுத்திருப்பதாகவும் ஆனதால் பிரதிவாதிகளால் கலியாண சாமக்கிரியை ரூபாய் 550-ம் வாங்கிக் கொடுக்குப்படியாயும், வாதிகளாகிய தாங்கள் இனி மேல் நடப்பிக்கப்பட்ட சுபாசுபக் கிரியைகளில் பிரதிவாதிகளெங்கும் எத்தேச கிராமங்களிலும் பிரதிவாதி வம்மிசத்தாரைப் பிரவேசிக்காமலிருக்கும்படியாயும் தீர்மானிக்க வேண்டுமெனவும் கண்டிருக்கிறார்கள்.&lt;a title="" style="mso-endnote-id: edn22" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn22" name="_ednref22"&gt;[xxii]&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரதிவாதிகள் கொடுத்த ஆன்ஸர்&lt;br /&gt;&lt;br /&gt;பிராதில் கண்ட பிரம்மரிஷிகளுக்கும் வாதிகளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையென்றும், பிரம்மரிஷிகளுடைய வம்சம் வாதிகளுடைய வம்சம் அல்லவென்றும், வாதிகள் பஞ்சமர் வம்சத்திற்குச் சமமானவரென்றும், ஆனதால் வேதோக்தமாய் உபாத்தியாயஞ் செய்யக் கூடாதென்றும், வாதிகள் செய்கிற தொழில் வெகு நிக்ருஷ்டமானதென்றும், தாங்கள் சுருதிப் பிரமாணமாயும் பிராமணாளென்பது திருஷ்டாந்தமாய் உலகத்திலுள்ள சமஸ்த வருணாசிரமத்தாருக்கும் தங்களைக் கொண்டே சகல கிரியைகளும் நடப்பித்துக்கொண்டு வரப்பட்டவர்கள். தாங்கள் இருக்கையில் வாதிகள் மாமூலுக்கு விரோதமாய்த் தாங்களேயென்று கலியாண காரியங்கள் நடப்பிக்க யத்தனப் பட்டதேயன்றி தங்களால் நஷ்டம் சம்பவித்ததில்லையென்று கண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாதிகள் கொடுத்த ரிப்ளை&lt;br /&gt;&lt;br /&gt;ஸாநகரிஷி, மனுப்பிரம்மரூபமும், ஸநாதனரிஷி மயப்பிரம்மரூபமும், பிரத்னஸரிஷி சில்பிப் பிரம்மரூபமும், சுபர்னஸரிஷி விஸ்வக்ஞப் பிரம்மரூபமும் இந்தப் பிரம்மரிஷிகளில் வகுத்துக் கொண்டவர்களின் வம்மிசத்தார்களாகிய தங்களுக்கு வேதோக்தமாய் மேற்கண்ட ரிஷிகளின் கோத்திரசாகை பிற வகைகளும் உண்டாயிருப்பதாகவும்,&lt;br /&gt;&lt;br /&gt;வேதபிராமணப் பூர்வீகமாய் மனுப்பிரம்மாவிற்கு இரும்பு வேலையும் ரிக்வேத பாராயணமும் துவஷ்டப் பிரம்மாவுக்கு தாமிர வேலையும் சாமவேத பாராயணமும் விஸ்வக்ஞப் பிரம்மாவுக்கு சுவர்ண வேலையும் பிரணவவேத பாராயணமும் ஆகிய இந்தப் பஞ்சவித கன்மங்களை அனஷ்டித்து விதிப்படி வருகிறதினாலே உலக சம்ரக்ஷ்ணையாகி வருகிறதாகவும்,&lt;br /&gt;&lt;br /&gt;தங்களுடைய அவுபாஸன ஓமகுண்டலத்திற்கு தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு முதலான பஞ்சலோகங்களையும் ரத்தினம் முதலான நவமணிகளையும் ஆகுதி கொடுத்து அதினாலே சிருஷ்டிதிதி, சம்ஹாரம், திரோபாவம், அநுக்கிரக முதலானதற்கும் அஸ்திர ஆயுதங்களை உண்டாக்கவும் சென, ஆசன, அத்தி என அத்தியர் பதானதான பிரிதீ சஷ்டி கர்மமும் சர்வதாபிமானமும் அரசுநிலை ஆக்கினாச்சுரமும் இஷ்டகாம் யார்த்தமும் ஜனன மரணநரக கதியும் ஆதாரமாயிருப்பதுமன்றி சர்வாதார கடவுளாக்கினைக்குச் சம ஆதாரமாயிருக்கின்றது மன்றியில்,&lt;a title="" style="mso-endnote-id: edn23" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn23" name="_ednref23"&gt;[xxiii]&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனுப்பிரம்மா உற்பவம் - வாரம், மயப்பிரம்மா உற்பவம் - நக்ஷத்திரம், துவஷ்டப் பிரம்மா உற்பவம் - யோகம், சில்பி பிரம்மா உற்பவம் கரணம், விஸ்வக்ஞப் பிரம்மா உற்பவம் ஆக இருப்பதால் பஞ்சாங்கம் சொல்லிக் கொண்டு தாங்களே உபாத்தியாயஞ் செய்யலாமென்றும், விஸ்வகர்மாவின் வம்சத்தவர்களாகிய தங்களுக்கு கர்ப்பத்திலேயே பிராமணத்துவம் நிச்சயமாயிருப்பதாகவும்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பிரதிவாதிகள் பறையர், சக்கிலி முதலான நீச சாதியாரும் பிரதிவாதிகளும் ஒரே யோனியில் ஜன்மித்த கோத்திரத்தாரென்பதற்கு திருஷ்டாந்தம் மனுஸ்மிருதி ஸ்லோகங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைக்கோட்டார் மான் வயிற்றிலும் கௌசிகர் காதி மகராஜாவுக்கு ஜம்புநர் நரி வயிற்றிலும் கௌதமர் பசுவின் வயிற்றிலும் வால்மீகர் வேடச்சிக்கும் அகஸ்தியர் கும்பத்திலும் வியாசர் செம்படத்தி வயிற்றிலும் வசிஷ்டர் தாசி வயிற்றிலும் நாரதர் வண்ணாத்தி வயிற்றிலும் கௌண்டின்யன் முண்டச்சி வயிற்றிலும் மதங்கர் சக்கிலிச்சி வயிற்றிலும் மாண்டவ்யர் தவளை வயிற்றிலும் சாங்கியர் பறைச்சி வயிற்றிலும் கார்க்கேயர் கழுதை வயிற்றிலும் சௌனகர் நாயின் வயிற்றிலும் இவ்வித உற்பவமன்றியில் பின்னும் வேமன பத்தியப் பிரகாரம் பறையர் குலத்தில் பிறந்து பறையரைத் தூஷித்து வருகிறதுமன்றியில், ஆதியில் பிறந்தவரை அறியாரோ? இரு பிறப்பர் சேற்றினில் பிறந்த செங்கழுநீர் போல் கூடத்தி வயிற்றில் பிறந்தார் வசிஷ்டர். வசிஷ்டருக்குச் சண்டாளி வயிற்றில் பிறந்தார் வசிஷ்டர். வசிஷ்டருக்குச் சண்டாளி வயிற்றில் பிறந்தார் க்ஷத்திரியர். புங்கனூர் புலைச்சி வயிற்றிற் பிறந்தார் பராசரர். பராசரருக்கு மீன் வாணிச்சி வயிற்றிற் பிறந்தார் வேத வியாசரென்றும் நீச சாதி முதலான சங்கர சாதியினுற்பவித்த ரிஷிகளின் வம்சத்தார்களென்றும்&lt;a title="" style="mso-endnote-id: edn24" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn24" name="_ednref24"&gt;[xxiv]&lt;/a&gt; இவ்வுற்பவதானத்தைக் கோர்ட்டாரவர்கள் பரிசோதித்தால் பிரதிவாதிகள் மேற்கண்ட ரிஷிகளின் வம்சஸ்தார் என்பது திருஷ்டாந்தப்படும் என்றுங் கண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப் பிரதிவாதிகள் தங்கள் ரிஜாய்ண்டரில் மேற்படி ரிஷிகளின் உற்பத்தியானது வாதிகள் ரிப்ளையில் கண்டபடிக்கு இருந்த போதிலும் பிரம்ம பீஜந்தாரென்றும் வாதிகளைக் குறித்து வேத வாக்கிய முண்டாயிருப்பது உண்மையாயிருந்தால் பாரத முதலான புராணங்களில் விஸ்வப் பிரம்மாவைக் குறித்து மிகவும் தாழ்மையாகக் கண்டிருக்க இடமிராதென்றும் தாங்கள் சிரேஷ்டர்களென்றும் வெகு காலமாய் ராஜராஜாக்கள் ஒப்புக் கொண்டு சர்வமானியங்கள் முதலானதும் விட்டு இருப்பதாகவும் கண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டாரவர்கள் தீர்மானம்&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்த நம்பர் கட்டு முதலான வேதச்சுருதி பிரமாணங்களெல்லாம் கோட்டாரவர்கள் நன்றாய் பரிசோதித்து ஆலோசனை செய்யுமளவில் சுருதிப் பிரமாணமாயும் சாஸ்திரோக்தமாகவும் வாதிகளாகிய தாங்களே விஸ்வப் பிராம்மணாளென்றும், பிரதிவாதிகள் சங்கர ஜாதியாரென்று ஆட்சேபித்துச் சமாதானம் சொல்லுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. பிரதிவாதிகள் பிராமணாளாயிருப்பது ஆன்சரில் கண்டபடிக்கு வாதிகளைப் பஞ்சம சாதியென்று சொல்வது யதார்த்தமாயிருந்தால் யாதொரு வசன மூலமாவது சமாதானஞ் சொல்லாமலும் அவர்கள் சொல்லப்பட்ட சாஸ்திரம் நூதனமென்றாவது வேறே விதமான தாத்பரியமிருக்கிறதென்றாவது ஆட்சேபிக்காமற் போனபடியால் யாதொரு புரட்டுமிருக்கமாட்டாது.&lt;br /&gt;&lt;br /&gt;3. புராணங்கள் மூலமாய் பிரதிவாதிகளின் முன்னோர்களாகிய ரிஷிகளின் ஜனனங்களைப் பரிசோதித்தால் வாதிகள் ரிப்ளையில் சொல்லிய வச்சிரசூசி முதலான சுருதி வாக்கியத்திலும் பிரம்மஞானியான வேமன சதகத்திற்கும் இணங்கியிருப்பதாக அபிப்பிராயப்படுவதுமன்னியில் மேற்படி பிரதிவாதிகளின் ரிஷிகளை வாதிகள் ரிப்ளையில் சொல்லிய பதினைந்து ரிஷிகளும் தங்கள் ரிஷிகளல்ல என்றாவது, மறுதலிக்காமல் பிரம்ம பீஜத்திற்கு உற்பவமான ரிஷிகள் என்று சொல்வதைக் கேட்டால், பிரம்மாவானவர் நீதியைத் தப்பி ஒருபோதும் நீச சாதிகளிடத்தும் ஜெந்துக்களிடத்திலும் சம்பந்தஞ் செய்திருக்க மாட்டார். அப்படியிருப்பது யதார்த்தமாயிருந்தால் ரிஷிமூலங்கள் சொல்லக் கூடாதென்று புராணங்களில் கட்டுப்பாடு செய்திருக்கும்படியாக நிமித்தியமிராது.&lt;br /&gt;&lt;br /&gt;4. பார்ப்பாரின் கோத்திரங்களிலும் பிறவரையென்று என்று சொல்லப்பட்ட உற்பத்தியும் சாஸ்திர பூர்வீகமாய்த் தெரியப்படுத்தும்படிக்கு மேற்படி ஜில்லா சதுரமீன் பண்டிதருக்கு சகஸ்திரநாமா எழுதித் தெரிவித்ததிலும் மேற்கண்ட பதினைந்து ரிஷிகளுடைய உற்பத்தி ஸ்தானமாயிருக்கிறது. மேலும் அவர்கள் உலகத்தில் பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர சாதி முதலான சகல வருணாசிரமங்களும் ஏற்பாடான வெகு காலத்திற்கு பின்பு ஜனித்த முனிவர்களாயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ரிஷிகளின் வம்சத்தாராகிய பிரதிவாதிகள் சிருஷ்டி ஆதியிலேயே ஜனித்த பிரம்ம வம்சத்தாரென்பதற்கு யாதொரு ஞாயமும் காணப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;5. பிரதிவாதிகள் சகல வருணாசிரமத்திற்கும் உயர்ந்த பிராம்மணர்களாயிருப்பார்களேயாகில் பிரம்ம சிருஷ்டிக்கு கொஞ்சம் சம்மதியாகிய சகலத்துக்கும் ஆதாரமான கர்மம் அவசியமாக இருக்க வேணும், அப்படிக்கொன்றுமில்லாமல் ஜோகி ஜங்கமரைப் போலே யாசித்து ஜீவனம் செய்யும்படி பரிச்சேதம் விதியிருக்கமாட்டாது.&lt;br /&gt;&lt;br /&gt;6. வாதிகள் தஸ்தாவேசுகளாக தாக்கல் செய்திருக்கிற வேத சாஸ்திரங்களைப் பரிசோதனை செய்ததில் உபயவாதிகள் பாராயணஞ் செய்து கொண்டு வரப்பட்டவர்களாகவிருந்தபோதைக்கும் அந்த வேதங்களில் ஒரு வரியாவது ஒரு அட்சரமாவது பிரதிவாதிகளுக்கும் அவர்கள் முன்னோர்களான முனிகளுக்கும் மற்றவர்களுக்கும் பாத்தியமுண்டாயிருப்பதாகக் காணப்படவில்லை. முன்னோர்களாகிய ரிஷிமுனிகள் லோகப் பிரசித்தமாய் நீசச் சாதியில் பிறந்தவர்களாயிருக்கையில் அவர்களுடைய வம்சஸ்தர்களாகிய பிரதிவாதிகளை சர்வச் சிரேஷ்டர்களாக ஒப்புக் கொள்வது சாஸ்திர விசாரணையில்லாமையாயும் அறிவில்லாமையாயும் இருக்கிறது. ஆனால் முன்னாலே சில தேசங்களுக்குப் பாளையக்காரராக இருந்த அவிவேக துரைத்தனத்தாரையும் சில மூட ஜனங்களையும் எப்படியோ சூதடியினாலே மோசஞ் செய்து நாளது வரைக்கும் கரு ஆண்மை செலுத்திக் கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட மோசடிகளைக் கண்டுபிடித்து வருணாச்சிரம தருமங்களையறிந்து பரிபாலனஞ் செய்வது கனம்பொருந்திய கவர்மென்டு துரைத்தனத்தைச் சார்ந்த நீதியாயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;7. வாதிகள் பிராதிலும் ரிப்ளையிலும் சொல்லியிருக்கிற பஞ்சமுகப் பிரம்மாவின் சிருஷ்டி பரம்பரையினுடைய வம்சத்தார்களாகவும் உலக சம்ரக்ஷணைக்காக ஈஸ்வரனுடைய ஆக்கையென்று சுருதி வாக்கியப்படிக்கு சமஸ்தத்துக்கும் ஆதாரமான பிரம கர்மமென்ற பஞ்சவித கர்மங்களை வாதிகள் செய்து கொண்டு வருவதனாலே உலக சம்ரக்ஷணையாகி வருகிறதாக எசுர்வேத முதலானதும் முறையிட்டுக் கொண்டு வருவதனால் ஈஸ்வர ரூபமாகிய ஆகாஸ பூதமானது சகலத்திலும் வியாபித்திருக்கிறாப்போலே வாதிகள் செய்யப்பட்ட பஞ்சகிர்த்தியங்கள் ஜகமுழுவதுக்கும் பீபிலிகாதி ஜந்துக்களுக்கும் ஆதாரமாய்ச சர்வத்திர வியாபியாய் வியாபித்துக் கொண்டிருப்பதால், வேத சம்மதியாய்ப் பிரயட்சமான பிராம்மணரென்று நம்புவதற்குப் போதுமான திருப்திகார முண்டாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;8. பாரத முதலான கற்பனைப் புராணங்களில் விஸ்வப் பிரம்மாவைக் கொஞ்சம் நிக்ருஷ்டமாய் எழுதியிருப்பதைப் பார்த்து பிரதிவாதிகள் மனஞ் சகிக்கமாட்டாமல் தூஷித்துப் புராணக் கட்டுக்கதைகள் செய்திருக்கிறார்கள். அப்படியிருந்த போதைக்கும் சகல சாஸ்திரங்களுக்கும் சாட்சியாயிருக்கிற ஆதி வேதங்கள் சிரேஷ்டமாயிருப்பதால் புராணங்களின் கட்டுக் கதைகள் உபயோகப்படமாட்டாது.&lt;br /&gt;&lt;br /&gt;9. பிராதில் கண்டபடிக்கு வாதிகளைப் பிரதிவாதிகள் கும்படி கூடியடித்து கலியாண முகூர்த்தங்களை நடவாமல் தடங்கல் செய்து குந்தப்படுத்தினதாகவும் வாதிகள் சாட்சி நாகோஜிராவ், சுப்பராய முதலி, வெங்கட்ராம நாயக்கன் முதலான பதினைந்து பேர்களாலும் மாஜிஸ்டிரேட் டைரியினாலும் ருசுவாகியிருக்கிறதினால் கலியாண சாமக் கிரியை நஷ்டம் ரூபாய் 550-ம் இதற்கடியில் காண்கிற செலவுகளும் வாதிகளுக்குப் பிரதிவாதிகள் கொடுக்கும்படியும், வாதிகள் தங்களுக்குண்டாயிருக்கிற பாத்தியப்படிக்கு வேதபாராயண முதலியதுஞ் செய்து கொண்டு சகல கிரியைகளும் தாராளமாய் நடத்திக் கொண்டு வரும்படியாயும் அதில் பிரதிவாதிகள் பிரவேசிக்கக் கூடாதெனவும் தீர்மாளிக்கலாச்சுது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்படிக்கு 1818 டிசம்பர் 15 தேதி&lt;br /&gt;&lt;br /&gt;சித்தூர் ஜில்லா அதலாத்து கோர்ட்டாருடைய தீர்மானம்&lt;br /&gt;&lt;br /&gt;அசலுக்குச் சரியான நகல்&lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய வழக்கு விவரங்களும் தீர்ப்பும் சாதி சமத்துவப் போராட்டத்தில், சமத்துவம் கோருவோரது கருத்துக்களையும் அதனை மறுப்போரது கருத்துக்களையும் தெளிவாகக் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சமத்துவம் கோருவோர் யசுர் வேதத்திலிருந்து தங்கள் உற்பவத்திற்கு மேற்கோள் காட்டுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? யசுர் வேதப் பாடல்கள் தோன்றிய காலத்தில் ரிக்வேத காலத்தைப் பார்க்கிலும் உற்பத்திச சக்திகள் அதிகரித்துவிட்டன. உலோகக் கருவிகளும் மரக் கருவிகளும் தோன்றிவிட்டன. அவற்றைப் பயன்படுத்தி மனிதன் ரிக்வேத காலத்தைப் பார்க்கினும் வளப்பமான வாழ்க்கையைப் படைத்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரிக்வேத காலத்தில் இயற்கைச் சக்திகளைக் கடவுளர்களாக வழிபட்ட மனிதன், யசுர் வேத காலத்தில் தனது புதிய படைப்பாற்றலையே தெய்வமாக வழிபடத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனையே பிரம்மமென்றும் பஞ்சமுகப் பிரம்மமென்றும் பஞ்ச கிருத்யங்களையே பிரம்மாவின் படைப்புத் தொழிலென்றும் கருதத் தொடங்கினான். ரிக்வேதத்தின் பிற்பகுதியில், பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட புருஷ சூக்தத்தில் கூட்டுண்ணும் மனித வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பிரபஞ்ச உற்பவத்தையும் உயிர்களின் உற்பவத்தையும் விளக்க முயன்றான். யக்ஞம் என்பது கூட்டு வாழ்க்கையில் வழிபாட்டு முறை. கூட்டுணர்வு வாழ்க்கை முறையில் மனிதர்களை ஒரு கூட்டு நிறுவனமாக உணர்ச்சியால் இணைக்கும் சடங்கு (ritual) அது.&lt;br /&gt;&lt;br /&gt;புருஷ சூக்தமே பிற்கால வருணாசிரமப் பிரிவுகளில் உயர்வு தாழ்வுகளைக் கற்பிப்பதற்குக் காரணமாயிற்று. வருணாசிரமப் பிரிவினைகளின் ஆரம்ப காலத்தில் புருஷ சூக்தம் எழுந்தது. எல்லா வருணங்களும் ஒரே மூலப்பொருளான கூட்டமைப்பினின்றும் தோன்றியது என்பதையே அது உருவகமாகக் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புருஷ சூக்தத்தின் சில பகுதிகளில் வருணத் தோற்றுவாய் கூறப்பட்டுள்ளது. நமது ஆய்விற்கு அவை அவசியமாகையால் அவற்றை இங்கு தருவோம்.&lt;a title="" style="mso-endnote-id: edn25" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn25" name="_ednref25"&gt;[xxv]&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கு வேதம்&lt;br /&gt;8 - வது அஷ்டம்&lt;br /&gt;புருஷ சூக்தம்&lt;br /&gt;&lt;br /&gt;இருடி - நாராயணன்&lt;br /&gt;தேவதை - விராட் புருஷன்&lt;br /&gt;சந்தசு - முதலில் அனுஷ்குபு, முடிவில் திருஷ்டிபு&lt;br /&gt;விஷயம் - சிருஷ்டி&lt;br /&gt;&lt;br /&gt;விராட் புருஷ சொரூபம்&lt;br /&gt;&lt;br /&gt;விராட் புருஷனுக்கு ஆயிரம் சிரசுகளாம், ஆயிரம் கண்களாம், ஆயிரம் கால்களாம், அவன் பூமி முழுவதும் வியாபித்து 10 அங்குலப் பிரமாணமுள்ள தேகத்தையுடையவனாக விருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;புருஷனே உலக முழுவதுமாம். பூத காலம், பவிஷிய காலம் யாவும் அவனேயாம். உணவினாற் பருத்து அழியாதிருப்பதற்கும் அவனே கருத்தனாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவும் இவன் மகிமையேயாம். இவன் உத்தம புருஷனும் மூத்தோனுமாம். சர்வ பூதங்களும் இவனிற்காற் கூறாம். அழிவற்றதும் சுயம் பிரகாசமுள்ளதுமானவை இவனில் முக்காற் கூறாம்.&lt;br /&gt;&lt;br /&gt;புருஷனது முக்காற் கூறும் ஆதியில் மிகவும் நிர்மலமாய் இருந்தது. அவனில் காற்கூறு மீளவும் சிருஷ்டி, ஸ்திதி, நாசமித்தம் மாயா ரூபத்தையடைந்தது. அந்த மாயா ரூபத்தையடைந்த பின் சேதனா சேதங்களைக் குறித்து எங்கும் நானா விதமாய் வியாபித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பரமாத்மாவிலிருந்து பிரம்மாண்டாதி தேகமுண்டாயிற்று. தேகத்தையே காரணமாகக் கொண்டு பின்னர் அந்தத் தேகாபிமானியான புருஷன் உண்டானான். அங்ஙனமுண்டான அந்த விராட் சொரூபி தன்னின் வேறான தேவ மனுஷ்ய திரியக்கு முதலிய ஸ்வரூபத்தை அடைந்தார். பின்னர் பூமியையும் அதிலுள்ள சீவர்களுக்குத் தேகத்தையும் உண்டாக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் தேவர்கள் அந்தப் புருஷனைப் பலியிடும்படி யாகஞ் செய்தார்கள். அப்போது வசந்த காலம் அதற்கு நெய்யாகவும் கோடைகாலம் அதற்குச் சமித்து அல்லது விறகாகவும் சரத்காலம் நிவேதனம் அல்லது அவிசாகவும் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பலிபீடத்தைச் சூழ ஏழு அக்கினி அல்லது ஓமகுண்டங்களிருந்தன. அவ்விடத்து மூவேழுசமித்து அல்லது விறகுகள் உண்டாக்கப்பட்டன. இவ்விதம் தேவர்கள் யாகம் செய்த போது புருஷனைப் பலியிடும்படி பசுவாகக் காட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் ஆதியிற் பிறந்த புருஷனைப் பலியாக்கி தெற்பையின் மேல் இட்டார்கள். தேவர்கள், சாத்யர்கள், ரிஷிகளாகிய இவர்கள் அவனைத் தங்களுக்கு அவிசாகக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த யக்ஞமாகிய சர்வ பலியினின்றும் தயிரும் நெய்யும் உண்டாயின. காட்டிலும் நாட்டிலுமுள்ள வாயுவினை அதிதேவதையாகவுடைய மிருகங்களை அந்தப் புருஷன் உண்டாக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த யாகமாகிய சர்வ வலியினின்றும் இருக்கும் சாமமும் உண்டாயின. பின்னும் அதனின்று காயத்திரியாதி சந்தசும் யசுர் வேதமும் உண்டாயின.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த யாகத்தினின்று அசுவங்களும் இரண்டு வரிசைப் பற்களுள்ள சகல மிருகங்களும் உண்டாயின. பின்னும் அதனின்று பசுக்களும், பின்னும் அதனின்று செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உண்டாயின.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் புருஷனைப் பலியாக்கினபோது அவனை எத்தனை கண்டங்களாகப் பாகித்தார்கள்? அவன் முகம் என்னவாயிற்று? அவன் புஜங்கள் எவ்வாறாயின? அவன் துடைகளும் பாதங்களும் எப்பெயர் கொண்டன?&lt;br /&gt;&lt;br /&gt;பிராம்மணன் அவன் முகமாயினான். இராஜன் அவன் புயங்களாயினான். வைசியன் அவன் துடைகளாயினான். சூத்திரன் அவன் பாதங்களில் உதித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரன் அவன் மனத்திலுண்டாயினான். சூரியன் அவன் கண்களில் உண்டானான். இந்திரனும் அக்கினியும் அவன் முகத்திலிருந்து உண்டாயினர். வாயு அவன் சுவாசத்தில் உதித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் நாபியில் அந்தரம் அல்லது வெளி உண்டாயிற்று. அவன் சிரசில் வானமுண்டாயிற்று. அவன் பாதங்களில் பூமியும் காதில் திக்குகளும் உண்டாயின. இவ்விதமாக உலகங்களுண்டாயின.&lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பகுதிகள் உலக உற்பத்திக் கதையைச் சொல்லுகின்றன. சிறு குழுக்கள் பெருகி வேலைப் பிரிவினைகள் தோன்றிய காலத்தில் இப்பாடல்கள் எழுந்திருக்கவேண்டும். சிறுகுழு வாழ்க்கையில் - முக்கியமாகக் கால்நடை வளர்ப்பு வாழ்க்கையில் கூட்டுணர்வை ஏற்படுத்த நடத்திய இனக் குழுச் சடங்குகள் யக்ஞமும் யாகமும், யக்ஞம் சிறிய அளவில் நடைபெற்றது. யாகம் பல குழுவினர் சேர்ந்து நடத்தியது. அக்காலத்தில் ஒவ்வொரு வாழ்க்கைத் தேவைக்கும் ஒவ்வொரு சக்தியை வழிபடுவதற்காக யக்ஞம் நடத்தினர். வளர்ச்சியடைந்த கட்டத்தில் சிந்தனையும் விசாலமடைந்தது. வேலைப் பிரிவினை தோன்றிவிட்ட நிலையில் உலக சிருஷ்டியை அவர்கள் கற்பனை செய்து ஒரு கதையை உருவாக்கினர். அதுவே புருஷ சூக்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரிக்வேத ஆரியர்கள், தங்கள் பசு நிரைகளும் ஆட்ட மந்தைகளும் குதிரைகளும் பெருகுவதற்காகப் பசுவையும் ஆட்டையும் குதிரையையும் பலி கொடுத்தார்கள். ஜனத்தொகை பெருகுவதற்காக மனிதனைப் பலியிட்டார்கள். இச்செயல்களால் தாங்கள் விரும்பியவை கிடைக்கும் என்ற நம்பினார்கள். இந்நம்பிக்கைகள் இன்றும் கீழ்நிலைச் சமுதாய வளர்ச்சிகளிலுள்ள இனக்குழு மக்களிடையே காணப்படுகின்றன. ஒரு மகாபலியின் மூலமே பிரபஞ்சம் தோன்றியிருக்க வேண்டுமென்று அவர்கள் எண்ணினார்கள். அதன் மூலமே பிரபஞ்சம் தோன்றியிருக்க வேண்டுமென்று அவர்கள் எண்ணினார்கள். அதன் மூலமே ஒன்றாயிருந்த சமுதாயம் நான்காகப் பிரிந்ததென்றும் எண்ணினர். புருஷசூக்தம் இச்சிந்தனையின் கலை வெளிப்பாடே. இச்சிந்தனையிலும் உயர்வு தாழ்வு எதுவும் வர்க்கப் பிரிவுகளுக்குக் கற்பிக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முற்றிலும் உற்பத்தித் தொழில் முறையிலிருந்து பிரிந்துவிட்ட பின்னர்தான் பிராமணரும் க்ஷத்திரியரும் உழைப்பைத் தாழ்மையானதாகவும் சிந்தனையை உயர்வானதாகவும் மதிக்கத் தொடங்கினர். உழைப்பவர்களைக் கீழானவராகவும் மதித்தனர். அவர்களைத் தங்களுக்கு அடிமைத் தொழில் செய்யப் பிறந்தவரெனக் கருதினர். யதார்த்தத்திலும் தொழில் செய்வோர் அடிமை நிலைக்குத் தாழ்த்தப்பட்டு விட்டனர். இக்காலத்தில் சாதி உயர்வு தாழ்வுகளை நிலைநிறுத்தும் புராணங்களும் மனுஸ்மிருதிகயும் தோன்றின. இதற்கிடையில் வருணக் கலப்புகளும் உண்டாகி சங்கர சாதியினர் தோன்றினர். அவர்களுள்ளும் ரிஷிகள் தோன்றிப் பல புராணங்கள் எழுதினர். அவர்களே ரிஷி மூலங்களை ஆராய்ந்து பிறப்பைவிட, பிரம்ம ஞானமே சிறப்பிற்கு முக்கிய காரணமென்று வலியுறுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் ரிக்வேதத்தின் கூட்டு வாழ்க்கைக் காலத்தில் எழுந்த பாடல்களில் வருண வேற்றுமை சொல்லப்படவில்லை என்று கண்டோம். யசுர் வேதத்தில் படைப்புச் சக்தியே பிரம்மாவென்ற கருத்துக் காணப்படுகிறது. இவற்றை ஆதாரமாகக் கொண்டே தங்கள் சமத்துவத்தையோ, உயர்வையோ நிலைநாட்டிக்கொள்ள விஸ்வப் பிராமணர்கள் முயன்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தவிரவும் இரும்பு, மரம், செம்பு முதலியவற்றைப் பயன்படுத்திச் செய்யும் கருமார்களின் தொழில்களைப் பிராமணர்கள் இழிவானவையென்று கூறுகிறார்கள். இத்தொழில்களே உலக சம்ரட்சணைக்கு அடிப்படையென்றும் இவை பிரம்மாவின் தொழில்களென்றும் மனு முதல் விஸ்வக்ஞன் வரை ஐந்து ஆசாரியார்கள் இத்தொழில்களின் முதல்வர்களெனவும் அவர்களுடைய வம்சத்தினர் தாங்களெனவும் கூறி இவர்கள் தங்கள் உயர்வை நிலைநாட்ட முயலுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் செய்யாமல், புத்தியால் வாழ்பவர்கள், தொழிலைத் தாழ்ந்தது என்று கூறும் கருத்தை மறுத்துத் தொழிலே உயர்வானது, அதுவே உலகைப் பாதுகாப்பது, கடவுள் செயலுக்குச் சமமானது என்ற தொழில் மேன்மைக் கருத்தை (dignity of labour) இவர்கள் வலியுறுத்துகிறார்கள். வேறு எந்தச் சாதி வரலாற்றுக் கதைகளிலும் காணப்படாத கருத்து இது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி, புராணங்களை இருவரும் மேற்கோள் காட்டுகிறார்கள். பிராமணர்கள் பாரதம் முதலிய நூல்கள் பிரம்மாவையே பழித்திருக்கிறதென்றும் பல புராணங்கள் பஞ்சகருமிகளைப் பஞ்சமருக்குச் சமமானவர்களென்றும் சொல்லுகின்றனவென்றும் வாதிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பிலும் பஞ்சமுகப்பிரம்மாவிடமிருந்து தோன்றிய ரிஷிகளுக்கும் பஞ்ச கருமார்களுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லையென்று பிராமணர்கள் சொல்லுகிறார்கள். மனுஸ்மிருதியிலும் இவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக மேற்கொள்கள் காட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதே புராணங்களிலுள்ள ரிஷிமூலக்கதைகளைப் பிராமணரைப் பழிக்கவும் அவர்களுக்குக் குலச்சிறப்பு இல்லையென்றும் நிரூபிக்கவும் கருமார்கள் பயன்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அமைப்பைப் பாதுகாக்கவும் எதிர்க்கவும் தோன்றிய இருவிதமான சிந்தனைப் போக்குகளில் முதலாவதைப் பிராமணரும் இரண்டாவதை ஆசாரியார்களும் பயன்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கு பற்றிய தஸ்தாவேசுகளில் காணப்படுவது தவிர, குண்டையன், மார்க்கசகாயம் ஆசாரி சம்வாதத்தில் சில புதிய வாதங்கள் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றுள் வருணப் பிரிவுகளைப் பற்றியும் அவற்றின் ஒழுக்க முறைகளைப் பற்றியும் நடைபெறும் விவாதத்தின் சாரத்தையும் அவ்விவாதத்தில் எடுத்துக்காட்டப்படும் மேற்கோள்களின் தன்மையையும் சிறிது ஆராய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசாரியர்கள் ஐவர் பஞ்சமுகப் பிரம்மாவினிடமிருந்து தோன்றியதாக யசுர்வேதம் சொல்வதை மார்க்கசகாயம் ஆசாரி முதலியோர் தமது பிராதில் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தோம். இவர்களின் தொழில்களின் சிறப்பைப் பற்றியும் அத்தஸ்தாவேசில் சொல்லியிருக்கிறார்கள். 'சம்வாதத்தில்' இவர்களது தொழில்களே தெய்வங்களின் தொழில்களென்று மார்க்கசகாயம் ஆசாரி சொல்லுகிறார். அதற்கு யசுர்வேதத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மநுப் பிரம்மாவின் சிருஷ்டியே உமாமஹேஸ்வரராகிய உருத்திரன் தொழில். மயப்பிரம்மாவினுடைய சிருஷ்டியே நாராயண ஸ்வரூபமாகிய விஷ்ணு தொழில், துவஷ்டப் பிரம்மாவினுடைய சிருஷ்டியே ஸ்ரீ ஹிரண்ய கர்ப்பனாகிய பிரம்மாவின் தொழில். சில்பப் பிரம்மாவினுடைய தொழிலே தேவேந்திரன் தொழில். விஸ்வக்ஞப் பிரம்மாவின் தொழிலே சவிதா பாஸ்கரனாகிய சூரியன் தொழில்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு பிரம்மாவும் வேறு வேதக் கடவுளரும் தொழில் செய்வோர் என்று மா.ச. ஆசாரி கூறுவதைக் காணலாம். இத்தொழில்களைச் செய்யாத, ஏன் எத்தொழிலுமே செய்யாத பிராமணர்கள், தொழில் செய்யும் கடவுளர்களின் வம்சத்தாரல்லர் என்று காட்டுவதே அவரது நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;சூத்திரருக்கு, உயர் வருணத்தினர் மூவருக்கும் அடிமைத் தொழில் செய்வதே சுயதர்மம் என்று மனுஸ்மிருதி விதிக்கிறது. அவர்களுக்கு ஞானம் பெறும் உரிமை கிடையாது. வேதத்தைப் பாராயணம் செய்யும் உரிமையோ, காதால் கேட்கும் உரிமையோ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒவ்வொரு வருணத்தின் விதியைப் பற்றிக் குண்டையன் வினவும் பொழுது, சூத்திரரைப் பற்றி மா.ச. ஆசாரி இவ்வாறு கூறுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;சூத்திரரது விதியாவது: ஆதியில் விஸ்வப் பிரம்ம வம்சத்தார் இப்பூச் சக்கரத்தை (பூமியை) குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதமென்னும் பஞ்ச நிலமாகப் பகுத்தளித்து இன்ன காலத்தில் இன்ன பொருள் விளையுமென்றும், அதனை இந்த விதமாய்ப் பயிரிட வேண்டுமென்றும், கற்பித்தபடியே உயிர்களைக் காப்பாற்றுவது சூத்திரன் பெருமை யாகையால் அந்தச் சூத்திரன் தேவர்கள் முதலாகிய பிதுர்க்கள் யாவருக்கும் நித்தியநைத்திய உணவுகளைத் தருபவன். வேதாகமங்களுணர்ந்த விதி வழுவாதவனே சூத்திரனாவான்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னொரு கேள்விக்குப் பதிலளிக்கையில் சூத்திரருக்கும் வேத அத்யயனம் செய்யும் உரிமையுண்டு என்று கூறுகிறார். இவ்வாறு கூறுவதன் மூலம் எல்லா வருணங்களும் சாதிகளும் சமமென்று வாதிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புராணங்களே வருண உயர்வு தாழ்வுகளை ஆதரித்து வாதாடுவதால், மா.ச.ஆசாரி புராணங்களின் பல மாறுபாடுகளை எடுத்துக்காட்டி எல்லாப் புராணங்களுமே பொய்யென்று கூறுகிறார். பல புராணக் கதைகளைச் சொல்லி அவற்றின் முரண்பாடுகளைக் காட்டிய பின் மா.ச. ஆசாரியார் சொல்லுவதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பாகவதம் முதலிய புராணங்களில் விஷ்ணுவின் நாபிகமலத்தில் பிரம்மா உற்பத்தியானாரென்றும் வேறு சில நூல்கள் கமலத்தில் ஆதிசக்தி உண்டாகிய ஒருவிதத்தில் விஷ்ணுவின் பிதாவாகிய சிவன் உண்டானானென்றும் மச்ச புராணத்தில் ருத்திரன் பிரம்மாவால் சிருஷ்டிக்கப்பட்டானென்றும், நாரதீய புராணத்தில் நாராயணனுடைய வலப்புறத்தில் பிரம்மாவும், இடப்புறத்தில் விஷ்ணுவும் மத்தியத்தில் சிவனும் தோன்றினார்களென்றும் லிங்கபுராணத்தில் பிராம்மாண்டத்தில் ருத்திரன் ரூபிகரமாய்த் தோன்றித் தனது இடதுபுறத்தில் விஷ்ணுவையும், இலக்குமியையும், தனது வலப்புறத்தில் பிரம்மாவையும் சரஸ்வதியையும் தோன்றப் பண்ணினானென்றும், மேற்படி புராணம் தானே வேறோரிடத்தில், பிரம்மா தனது சிருஷ்டிகிரித்தியம் மந்தப்பட்டதினிமித்தம், விட்ட பெருமூச்சிலே பிறந்த ருத்திரன் அந்தத் தொழிலை நடப்பித்ததும் அது மீளவும் மந்தப்பட்டது கண்டு பிரம்மா அந்தத் தொழிலை மீண்டும் தானே நடப்பித்தானென்றும், மார்க்கண்டேய புராணத்தில், மகாலக்குமியிலிருந்து பிரம்மாவும், மாகாளியிலிருந்து ருத்திரனும், மகா சரஸ்வதியிலிருந்து விஷ்ணுவும் தோன்றினாரென்றும், வராக புராணத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரனென்ற மூவர்களிலுமூ ஒரு சக்தியுண்டாகி மூன்று பகுதிபட்டு லக்குமி - சரஸ்வதி - காளி என்பவர்களுண்டானார்களென்றும் சொல்லப் பட்டிருக்கிறது மெய்யல்லவோ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமென்றால் கேளும் குண்டையரே பாகவதம், மார்க்கண்டேயப் புராணம், வராகப் புராணம், நாராதீய புராணம், லிங்க புராணம் முதலான புராணங்களிலுள்ள பேதா பேதமான கட்டுக்கதைப் புராணங்களையெல்லாம் பொய்யென்று உமக்கும் மற்றவர்களுக்கும் விசதமாய் விளங்குதற்கு யாதொரு சந்தேகமில்லையல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு கதைகள் மூலமாக உயர்வு தாழ்வு கற்பிப்பதை எதிர்ப்பதற்குப் புராண முரண்பாடுகளை எடுத்துக்காட்டி வன்மையாக அனைத்தும் பொய்யென்று நிரூபிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் மேலான குலமென்று காட்டக் குண்டையன் பிராமணர் வீட்டில் எல்லோருஞ் சாப்பிடுகிற உலக வாழ்க்கைச் சான்றாகக் காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வீட்டில் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். உங்கள் வீட்டில் யாரும் சாப்பிடுவதில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;என்று குண்டையன் கேட்கிறார். இதற்கு விடையாக மா.ச.ஆசாரியார் கூறுவதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாங்கக் குண்டையனே! விசாயன் முதலான விப்பிரர்களாகிய நீங்கள் பஞ்சம சாதியானமையில் பூர்வத்தில் யாவரும் உங்கள் வீட்டில் புசியாதிருப்பதைக் கண்டு வேத விசாரணையில்லாத துரைத்தனத்தாரைப் பிடித்து அவர்களைப் பல சூதடியினாலே மோசடி செய்து உங்கள் வசப்படுத்தி நீங்கள் மேலான சாதியென்றும் யந்திர தந்திர மந்திர ஜால வித்தையினால் யாவரும் பிரமிக்கும்படி பிரம்ம ரிஷிகள் என்று பகல் வேஷம் போட்டுக்கொண்டு வந்து அக்காலத்திலிருந்த அவிவேக துரைத்தனத்தாருக்கும் விஸ்வப் பிரம்ம வம்சத்தாருக்கும் அஷ்ட கருமங்களால் மித்திர பேதஞ்செய்து அரசனைச் சார்ந்தார்களெல்லாம் வலங்கையென்றும் கம்மாளரை இடங்கையென்றும் ஒருவரிடத்தில் ஒருவர் சாப்பிடக் கூடாதென்றும் தங்கள் வீட்டில் மாத்திரம் சகலரும் சாப்பிடலாமென்றும் ஏற்பாடு செய்தீர்கள். அக்காலத்தில் உங்களை இன்னாரென்றறியாத சிலர் சாப்பிட்ட போதிலும், உங்கள் வம்ச பரம்பரையறிந்த ரஜபுத்திரர், பொந்திலியர், லாலாக்கள், குசிலாத்தியர், மராட்டியர், கன்னடியர், வீரசைவர், ஜைந வேளாளர், பட்டு நூற்காரர், சாத்தானியர், வள்ளுவர், துலுக்கர், மலுக்கர் முதலானவர் உங்கள் வீட்டில் இன்னுஞ் சாப்பிடுகிறதில்லையன்றோ? ஆனால் இக்காலத்தில் உங்களை அறியாதவர் சிலர் சாப்பிடுகிறார்கள். பஞ்ச கவுடாள், பஞ்ச திராவிடர்கள் உங்கள் வீட்டில் சாப்பிடாததற்குக் காரணம் என்ன? நீங்கள் விப்பிரர்களென்ற காரணமின்றி வேறொன்றுமில்லையே; சில சாதிகள் உங்களுடைய துர்ப்போதனைக்குட்பட்டு சாப்பிட்டபோதிலும் நீங்கள் பிரம்ம குலமென்று சொல்வது உண்மையாகப்பட மாட்டாது. அப்படி நீங்கள் பிரம்ம குலமானால் பஞ்ச கிர்த்தியத்தில் (ஐந்து தொழில்) ஏதாவது ஒன்றையாவது நீங்கள் செய்யவேண்டுமே ஒன்றுந் தெரியாமல் ஜோகி, ஜங்கமரைப் போல் யாசகஞ் செய்கிற கிராம பாச்சகர்களாகிய உங்களை பிரம்மவம்சமென்று யார்தான் சொல்லுவார்கள்? தெரிந்தவர்கள் ஒருக்காலும் சொல்லார்களல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு உணவு கொள்ளும் உலக வழக்கத்திலிருந்து உயர்வு தாழ்வுகளைப்பற்றி விவாதம் நடக்கிறது. இடங்கை, வலங்கைச் சாதிப் பிரிவுகள் ஒரு பிரிவினர் வீட்டில் மற்றொரு பிரிவினர் உண்ணலாகாது என்ற தடையும் பிராமணரால் விதிக்கப்பட்டவை என்று மா.ச.ஆசாரி கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இடங்கை, வலங்கை வரலாற்றை இவர் இங்குக் குறிப்பிடுகிறார். இப்பிரிவுகளின் தன்மையை அறிந்து கொள்வதற்குச் சோழர் காலத்துச் சாசனங்கள் சில துணைபுரிகின்றன. இச்சாசனங்களைப் பற்றித் தி.நா.சுப்பிரமணியன் பின்வருமாறு கூறுகிறார்:&lt;a title="" style="mso-endnote-id: edn26" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn26" name="_ednref26"&gt;[xxvi]&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சிராப்பள்ளி ஆடுதுறைக் கல்வெட்டு அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் வன்னியர்களும், வேளாளர், பிராம்மணர் முதலிய நிலச் சொந்தக்காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய 96 வகைச் சாதியார்களுக்கும் இழைத்த அநீதிகளைக் கூறுகிறது. இதே போல இடங்கை வகுப்பினர் அக்காலத்தில் ஏற்கவேண்டி வந்த வரிச் சுமைகளையும் தெரிவிக்கும் கல்வெட்டுக்கள் நாட்டின் பல பாகங்களிலும் அகப்படுகிறது. மைசூர் ஆவணியிலிருந்து கிடைத்த கல்வெட்டு முக்கியமானது. அரசன் ஆணைக்கிணங்கக் கூடிய பெரிய விஷயத்தாரின் முடிவை அது தெரிவிக்கிறது. நிகரிலிச் சோழ மண்டலத்தில் 78 நாடுகளும், ஜயங்கொண்ட சோழ மண்டலத்து 48,000 பூமியும் உள்ளிட்ட நாடுகளில் சோழ வமிசம் தோன்றிய நாள் முதல் பசு, எருமை முதலியவற்றிற்கு வரிவிதிக்கப்பட்டதில்லையென்றும் அதனால் அதிகாரிகள் சோழ மூவேந்த வேளாண் விதித்த இவ்வரிகளைக் கொடுக்க வேண்டாமெனவும் முடிவு கட்டினார்கள். அன்றி 18 விஷயங்களிலும் உள்ளவர்கள் கொடுக்க வேண்டிய வரி விகிதங்களையும் நிச்சயித்து நிர்ணயித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதற் குலோத்துங்க சோழன் காலச் சாசனம் இடங்கை வலங்கை கலகமொன்று இராஜமகேந்திரச் சதுர்வேதி மங்கலத்தில் நடந்ததாகக் கூறுகிறது. இம்மன்னனுடைய ஆட்சியின் இரண்டாம் ஆண்டில் வலங்கை - இடங்கை சமூகத்தார்களிடையே ஒரு கலகம் நடந்தது. அதிலே கிராமம் முழுவதும் சுட்டெரிக்கப்பட்டது. கோயில் பண்டாரமும் கோயில் விக்கிரகங்களும் சூறையாடப்பட்டன. அவர்களுடைய கொள்ளைக்குத் தப்பிய பொருள்களைக் கோயிலிலே பாதுகாக்க முடியவில்லை. இக்கலங்களைக் குறித்து தி.நா.சு. குறிப்பிடுவது வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;இடங்கையாருக்கும் வலங்கையாருக்கும் நெடுநாளாக விரோதம் இருந்தது. இந்தச் சண்டைகள் சமூக வாழ்க்கையில் அவரவர்களுக்குள்ள சில உரிமைகளைப் பற்றியனவாகவே இருந்தன. சில சமயங்களில் சமாதானம் நிலவி ஒப்பந்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவை எந்த உரிமையை எந்த வகுப்பார் அனுபவிப்பது என்பது பற்றியே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சில சாசனங்கள் வலக்கைச் சாதிகள் சிலவற்றையும் இடங்கைச் சாதிகள் சிலவற்றையும் குறிப்பிட்டுப் பட்டியல் கொடுக்கின்றன. அவற்றைக் கவனித்தால் வலங்கையர் நன்செய் அல்லது புன்செய் நிலத் தொடர்புடையராகவும் இடங்கையர் வணிகம் அல்லது கைத்தொழில்களோடு தொடர்புடையராகவும் காணப்படுகின்றனர். செட்டி, சேணியன், கைக்கோளன், தச்சன் முதலிய கம்மாளர்கள் இடங்கையர். நிலச்சுவான் சாதிகள், பள்ளர், பறையர் முதலியோர் வலங்கையர்.&lt;br /&gt;&lt;br /&gt;வலங்கைச் சாதிகளில் நிலப்பிரபுகள் தலைமை பெற்றிருந்தனர். அவர்கள் நிலத்தில் உழைப்போரின் உழைப்பில் வாழ்வோர். இடங்கைச் சாதிகளில் தலைமை பெற்றிருந்த பெருவணிகர் கைத்தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டி வாழ்வோர். சமூக - அரசியல் ஆதிக்கப் போராட்டங்களில் நிலப்பிரபுக்கள் வலங்கைச் சாதியினரைத் தம் பக்கம் சேர்த்துக்கொண்டு, வணிகர்களைத் தாக்கியபொழுது, அவர்கள் இடங்கைச் சாதியினரைத் தம் பக்கம் சேர்த்துக்கொண்டனர். நிலப்பிரபுக்கள், வணிகரது கூட்டுச் சுரண்டலை எதிர்க்க உழைப்பாளி மக்கள் ஒன்றுபடவிடாது, இவர்கள் சிறு உரிமைகளுக்காக இச்சாதிகளில் தாழ்ந்தவர்களை மோதவிட்டுக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் மேற்குறித்த சாசனச் செய்திகளை நோக்கும் பொழுது, அநீதியான வரிகளையும் சமூக அடக்குமுறைகளையும் எதிர்த்து இடங்கை வகுப்பினர் போராடியுள்ளனர் என்பது தெளிவாகிறது. அவர்களுடன் வலங்கைக் கீழ்ச் சாதியினர் வர்க்க ரீதியாகச் சேர்ந்துவிடாமலிருக்கவே இச்சாதிப் பிரிவுகளையும் சச்சரவுகளையும் உயர் வர்க்கத்தினர் கிளப்பிவிட்டனர். இதற்குரிய புதிய கதைகளைப் பிராமணர்கள் எழுதிக் கொடுத்தனர். எனவே இப்பிரிவுகள், தங்களது நலன்களைப் பாதுகாக்துக்கொள்ள உயர் வர்க்கத்தினர் படைத்ததேயன்றி பிராமணர் சிருஷ்டியல்ல. ஆனால் பிராணமனர்கள் தமது அறிவால் இவ்வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாக்கப் புராணங்களையும் நீதி நூல்களையும் எழுதினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இடங்கை, வலங்கைப் பிரிவுகளைப் பற்றி நிலப்பிரபுத்துவத் தன்மை கொண்ட வேளாளர் பெருமையை விளக்கும் 'வருண சிந்தாமணி' என்னும் நூல் கீழ்வரும் கதையைச் சொல்லுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்ச நகரைக் கொடுங்கோலனும் காமுகனுமான மதன பூபதி ஆண்டு வந்தான். அக்காலத்தில் கற்புக்கரசியான வேதவல்லி என்பவனைப் பலவநதஞ் செய்தான். அவள் அவமானத்தினால் உயிர் குன்றித் தற்கொலை செய்துகொண்டாள். இதனால் நாட்டவர் எல்லோரும் அந்நகரை விட்டு வெளியேறிப் போய்விட்டனர். அவ்வரசனும் அவன் குடும்பமும் ஒருங்கேயழிந்தன. நாடும் மண்மேடிட்டு, புல் பூண்டுகளும் இன்றி வெட்டவெளியாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது காலத்திற்குப் பின் காட்டுச் சாதியாரான குறும்பர்கள் அங்கு ஆடு மேய்க்க வந்து குடியேறினர். பின்னர் பல சனங்களும் வந்து சிற்றூர்கள் தோன்றின. பிற நாடுகளுக்குச் சென்றுவிட்ட வேளாளர், கவரை செட்டி, வணிகர் முதலிய பலரும் வந்து சேர்ந்தனர். காடாயிருந்த இடமெல்லாம் நாடாயிற்று. அங்குள்ள மக்களுக்கு அரசில்லாமையால் குல தருமங்களை நடத்த முடியாமல் இருந்தது. சம்பாதித்த பொருளை அநுபவிக்க முடியாமல் இருந்தது. கன்னம், களவு, கொள்ளை முதலியவற்றால் இடர்பட்டு வணிகம் நடத்த முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இனி வருண சிந்தாமணியிலுள்ளபடியே மேற்கொண்டு கதையைச் சொல்லுவோம்:&lt;br /&gt;&lt;br /&gt;அங்ஙனம் நேர்ந்த காலத்தில் விவேகிகளாயுள்ளவர்கள் நாம் எல்லோரும் கூடி நம்முள் ஒரு எசமானை ஏற்படுத்திக் கொண்டு அவனுக்கு உலகியலை நடத்த அதிகாரங்களைக் கொடுத்து அவனது கட்டளையின்படி நாம் நடக்க வேண்டுமென்று ஏற்பாடுகள் செய்தால் நாம் இவ்விடத்தில் சுகசீவனம் செய்யலாமென்று சொன்னார்கள். இது நல்ல காரியமே. இப்படிச் செய்வது எங்களெல்லோருக்கும் சம்மதம் என்று சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எல்லோரும் கேட்டு சந்தோஷம் கொண்டு ஒருங்கே எல்லா நற்குணங்களுமுடையவன் எக்குடியிலிருக்கிறான் என்று விசாரிக்கவே அதில் ஒருவன் இவையெல்லாம் வேளான் குடியில் காணலாம் என்றான். இன்னும் இவ்வேளாண் குடிபிறப்பினர் நடு நின்று எவ்வுயிர்க்கும் நுகர்ச்சி வருவித்தலும், பகை புலன் முறுக்கிப் பாதுகாத்தலும் திருவிற் பொலிந்த சிறப்புடைமையும், இன்சுவையமுதம் இரந்தோர்க்கீதலும். பூமகட்கு உரிமை பூண்டு நிற்றலும் சத்துவத் தனிக்குணத்திலே பயிறலும், ஊக்கமும் செவ்வியும் உடையார் என ஆன்றோர் வாக்கானும் அறிந்திருக்கிறோம் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;மகாசனங்கள் எல்லோரும் கூடி சற்று நேரம் ஆலோசித்து இக்குணாதியம் உள்ளோர் வேளாளரென்று சர்வ சம்மதாய் ஒப்புக் கொண்டு அக்குடியிலுள்ள சகல நற்குணங்களும் உள்ள ஒரு பிரபுவைக் குறிப்பிட்டு இவரே நமக்கெல்லாம் முதன்மையாய் இருந்து அதிகாரம் செலுத்தி நம்மையாள வேண்டும் என்று அவருக்குப் பட்டங்கட்டினார்கள். அன்று முதல் அவருக்கு முதலியார் என்று பட்டப் பெயர் வந்தது. இப்பெயர் இக்காலத்தும் அவர் மரபிலுள்ளார்க்கும் வழங்கி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது அங்ஙனமிருப்ப இதைக் கண்ட கம்மாளர்கள் அழுக்காறுடையவர்களாய் இவ்வேளாளருக்கு நாம் அடங்கி நடக்கிறதா? நாம் இவர்களை எதிர்த்தால் வெல்ல மாட்டோம், இம்மனிதருக்குள் சிலரைக் கலகப்படுத்தி கட்சியேற்படுத்திக் கொண்டு அவர்களை முன்னாகச் செல்லவிட்டு நாம் பின்னிருந்து வேளாளருக்குக் கொடுத்த அதிகாரத்தை மாற்ற வேண்டுமென நினைத்து வியாபாரச் செட்டிகளைக் கூட்டி நீங்கள் செல்வந்தர்களாயிருந்தும், வேளாளர் பட்டங்கட்டி ஆள நாம் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறதா என்று சொல்லவே, வியாபாரச் செட்டிகள் அதற்கு என்ன செய்கிறதென்றார்கள். நீங்கள் பொருளைச் செலவிடும் பட்சத்தில் மகாஜனங்களையெல்லாம் நம்முடைய பட்சம் திருப்பிக்கொண்டு அவ்வேளாளர்களுக்குக் கொடுத்த அதிகாரத்தை உங்களுக்குக் கொடுக்கும்படி செய்விக்கிறோம்; நீங்கள் எஜமானாக ஆளலாம் எனவே, அவர்களும் அதை நம்பி தங்களிடம் உண்டான திரவியங்களை வாரி விட்டார்கள். அத்திரவியங்களைப் பெற்று சொற்செல்லுதலையுடைய சனங்களுக்கெல்லாம் வேண்டுமான வரை கையடை கட்டுகிறோம். அவ்வதிகாரத்தை வியாபாரச் செட்டிகளுக்கு மாற்ற வேண்டும் என்றார்கள். அதற்குச் சிலர் உடன்பட்டும் சிலர் உடன்படாமலும் வெகுஜனக் கூட்டங்களுக்குள் இரண்டு கட்சி உண்டாயின. வேளாளருக்கு குடியரசுப் பட்டம் கொடுக்க வேண்டுமென்ற கட்சிக்காரர்கள் யாவர் எனின் கவரைகள், இரெட்டிகள், கம்மவாரு, கொந்தளவர், நந்தமான், மலையமான், கோமுட்டி, இடையர், சாலியர், சேணியர், பட்டு நூற்காரர், சேடர், செக்கு வாணியர், எருத்து வாணியர், இலை வாணியர், ஜனப்பர், முச்சிலியத், காஞ்சியார், வேதகாரர், ஜோசியர், குயவர், மேளகாரர், நட்டுவர், தாசிகள், ஈட்டியர், குறவர், சுக்கார், செட்டி, லம்பாடிகள், வேட்டைக்காரர், பட்டணவர், ஒட்டவர், உப்பரவர், போகி, பணி செய்வோர், வண்ணார், நாவிதர், பூசாரி, இருளர், பறையர், வெட்டியான்.&lt;br /&gt;&lt;br /&gt;வியாபாரச் செட்டிகளுக்குக் குடியரசுப் பட்டங் கொடுக்க வேண்டுமென்ற கட்சிக்காரர்கள் கைக்கோளர், கம்மாளர், பள்ளிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேளாளர் கட்சி பலத்ததனால் வலங்கையென்றும், வியாபாரச் செட்டி கட்சி இளைத்ததனால் இடங்கை என்றும் பெயராயின. வேளாளருக்காக கூடிய கூட்டம் வலுத்ததனால் அந்தப் பட்டம் வேளாளருக்கே நிலைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விரு கட்சிகளுடனும் சேராது வேளாளர்கள் பொதுவாகவே இருந்திருக்கிறார்கள். அங்ஙனமாயின் வேளாளரை வலங்கையென வழங்கி வருகிறதேயெனின், கவரை முதலியோரும் வேளாளருக்காகவே வலங்கையிற் சேர்ந்தமையின் வலங்கைக் கட்சியார் இவ்வேளாளரையும் தங்கள் கட்சியில் சேர்ந்தவரென்று கூறுவர். அங்ஙனமிருப்ப கம்மாளர் வேளாளரின் மேலே தீராப் பகையுடையவராய் உழவுத் தொழிற்குரிய கொழு முதலிய கருவிகளை நாம் செய்து கொடுப்பதனாலன்றோ இவர்கள் நம்மை அடக்கியாள வந்திருக்கிறார்கள். இவர்கள் அதிகாரத்தை பார்ப்போமென்று தாங்கள் தொழிலைச் செய்யாமல் இறுமாப்படைந்திருந்தனர். கிராமத்தார் உழவுத் தொழில் செய்ய முடியாமல் குடியரசாயுள்ள முதன்மையாருக்குத் தெரிவித்தவுடனே அவர் இக்கம்மாளர்களைப் பிடித்துச் சிறையிலிட்டு ஒறுத்தனர். உடனே அக்கம்மாளரின் பெண்டுகள் வந்து உழவிற்கு வேண்டிய கருவிகளை நாங்கள் செய்து தருகிறோம், எங்கள் புருஷர்களை ஒறுக்காதிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். அப்படியே அநேக நாள் கம்மாளப் பெண்டுகள் உழவிற்குரிய ஆயுதங்களை செய்து கொடுத்து வந்தார்கள். கம்மாளர்கள் புருஷர்கள் இடங்கையிலிருந்தும் அவர்களது பெண்டுகள் வலங்கையில் சேர்ந்திருந்தார்கள். அநேக நாள் வரை கம்மாளர்கள் சிறையினின்றும் நீங்க முடியாமையால் முதன்மையாரை இனி வழக்கப்படி எங்கள் தொழிலைச் செய்து வருகிறோம். எங்கள் குற்றத்தைப் பொறுத்துக் காவிலினின்றும் விடுவிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துச் சிறையினின்றும் நீக்கப்பட்டு வழக்கம் போல் வேலையை நடத்தி வந்தார்கள். இக்கம்மாளர்களைப் போலவே ஏனைய குடிமக்களும் தத்தந் தொழில் தடைபடாது நடத்தி வந்தமையால், மநு நீதி தவறாமல் குடியரசு அநேக நாள் வரையும் நடத்தப்பட்டு வந்தது. நாடும் வளப்பட்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பரம்பரைக் கதை வேளாளர்களால் தங்கள் சிறப்பைக் கூற எழுதப்பட்டது. ஆதலால் தங்கள் உயர்வையும் சிறப்பையும் இக்கதையில் மிகைப்படுத்திக் கூறியிருக்கிறார்கள் என்பது உண்மை. இக்கதையில் வரலாற்றுண்மைகளாகச் சொல்லப்படும் பல நிகழ்ச்சிகளுக்குச் சாசனச் சான்றுகளோ, வேறு சாதிகளில் வழங்கும் நாட்டுக் கதைகளில் சான்றுகளோ இல்லை. எடுத்துக்காட்டாக இக்கதை நடப்பதாகச் சொல்லப்படும் காலம் பண்டைச் சோழர்கள் காலம். அக்காலத்தில் இடங்கை - வலங்கைச் சாதிப் பிரிவுகள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் இல்லை. குடியரசுப்பதவி, இளங்கோப்பதவியென்ற அதிகாரப் பதவிகள் எக்காலத்திலும் இருந்ததில்லை. அரசனது ஆணையின் கீழ் பணிபுரிந்த நாடன், நாடாள்வான், நாட்டதிகாரிகள் முதலிய பதவிகளே பிற்காலச் சோழர் காலத்திருந்தன. பிற்காலச் சோழர் காலத்துச் சாசனங்களில்தான் இடங்கை, வலங்கை வகுப்பினரைப் பற்றியும் அவர்களிடையே நடைபெற்ற கலகங்களைப் பற்றியும் செய்திகள் காணப்படுகின்றன. அச்சாதிகளின் பெயர்களையும் இச்சாசனங்கள் குறிப்பிடுகின்றன. அச்சாதிகளில் வலங்கைச் சாதிகள் நிலப்பிரபுக்களோடும் நிலத்தோடும் தொடர்புடையவர்களெனவும் இடங்கையர் வணிகர்களோடும் கைத்தொழில்களோடும் தொடர்புடையவர்களெனவும் முன்னரே குறிப்பிட்டேன். ஆனால் இக்கதையில் சான்றுகளுக்கு மாறான முறையில் பல சாதிப்பெயர்கள் வலங்கைச் சாதிகளென்று கூறப்பட்டுள்ளன. தவிர, கதை நிகழ்ச்சிகள் நடந்ததாகச் சொல்லப்படும் காலமான பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தில் கவரைகள், ரெட்டிகள், கம்மவாரு, கோமுட்டி முதலிய தெலுங்குச் சாதியினர் பெயர்கள் அக்காலச் சாசனங்களில் கூறப்படும் வலங்கைச் சாதிகளில் இல்லை. தவிர, கைத்தொழில் புரியும் சாதிகள் இப்பட்டியலில் வலங்கைச் சாதிகளாகக் கூறப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய முரண்பாடுகள் இருப்பினும் இக்கதையின் அடிப்படைக் கரு ஒரு சமுதாய யதார்த்தமாகும். வேளாளர்களில் நிலக்கிழார்கள் நாட்டு அதிகாரிகளாக இருந்தனர் என்பதும் அவர்களுடைய ஆதிக்கத்தை வணிகர்களான செட்டியார்கள் எதிர்த்தார்கள் என்பதுமே அந்த உண்மை. இவர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாக்கச் சமூக அடித்தளத்தை விரிவுபடுத்திக் கொள்ளுவதற்காகத் தம்மோடு தொடர்புகொண்டவர்களைச் சேர்த்துக்கொண்டு போராடினார்கள். அரசியல் ஆதிக்கம் நிலக்கிழார்களுக்கு இருந்ததால் இடங்கை வகுப்பினர் அவர்களை எதிர்த்துப் போராடினர். இவர்களது தலைவர்களாயிருந்த வணிகச் செட்டிகள், வியாபார உரிமைகள், வரிச் சலுகைகள், சுங்கவரி நீக்கம் முதலியவற்றிற்காகப் போராடினர். அவர்களோடு சேர்ந்து நின்ற கைத்தொழிலாளரும் வரிக் குறைப்புக்காகவும் சமூக அந்தஸ்தைக் காட்டும் சில உரிமைகளுக்காகவும் போராடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் நலனைப் பாதுகாக்கவும் சமூக அமைப்பை மாறாமல் நிலைநிறுத்தவும் நிலக்கிழார்கள் தங்கள் அதிகாரப் பதவிகளைப் பயன்படுத்தினர். சாசனங்களின் செய்திகள் இவற்றைத் தெளிவாக்குகின்றன. இப்போராட்டங்களின் இறுதியில் முதற் குலோத்துங்கன், வாணிகர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சுங்க வரியை நீக்கியதால் 'சுங்கம் தவிர்த்த பிரான்' என்ற அடைமொழியால் கலிங்கத்துப் பரணியிலும் மெய்க்கீர்த்திகளிலும் அழைக்கப்படுகின்றான். இடங்கைச் சாதிகளுக்கும் அவ்வப்போது சில சலுகைகள் கிடைத்துள்ளன.&lt;a title="" style="mso-endnote-id: edn27" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn27" name="_ednref27"&gt;[xxvii]&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இச்சமூக உண்மையைத்தான் கதை வேறுவிதமாகத் தங்களுக்கு ஆதரவான முறையில் கூறுகிறது. எனவே வலங்கை, இடங்கைப் பிரிவுகள் சமூக வளர்ச்சி வரலாற்றில் நிலவுடைமையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் தங்கள் நலன்களுக்குகந்த முறையில் மக்களைத் தங்கள் பக்கம் திரட்டிக்கொள்ள ஏற்படுத்திக்கொண்ட பிரிவுகளே.&lt;br /&gt;&lt;br /&gt;தங்களை ஆதரித்த பிரிவுகளை நிலக்கிழார்களாகிய வேளாளர்கள் வலங்கையர் என்று அழைக்கிறார்கள். ஆனால், தாங்கள் அப்பிரிவைச் சேர்ந்தவர்களல்லர் என்றும் சொல்லுகிறார்கள். தங்களுக்காகப் போரிட்ட வலங்கைச் சாதிகளில் தாங்களும் ஒன்று என்று அவர்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை; ஏன்? அவர்களை ஆதரித்தவர்களில் பறையர், குறவர் போன்ற சாதியர்களும் இருந்தார்கள். பிராமணர்கள் எப்பிரிவையும் சேராதவர்கள். அவர்களைப் போலவே தாங்களும் உயர்ந்தவர்கள் என்று கூறுவதற்காகவும் கீழ்சாதிப் பிரிவுகளும் உள்ளடங்கிய ஒரு கூட்டமைப்பில் தாங்களும் ஓர் அங்கம் என்று பிறர் கருதுவதற்கு இடம் கொடாமல் இருப்பதற்குமே இவ்வாறு கூறினர். உண்மையில் வலங்கைப் பிரிவில் இவர்களது சாதிகளும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;வேளாளர்களும் பிராமணர்களும் தங்கள் சாதிகளது உயர்வைக் காட்டும் சான்றுகளைச் சேகரித்துக் கதைகள் எழுதினார்கள். ஆனால் அதே சமயத்தில் இடங்கை, வலங்கை இரு வகுப்பினரையும் சேர்ந்தவர்கள் தங்களுக்குக் கீழ்ப்பட்டவர்களே என்று இக்கதைகளில் எழுதினார்கள். எடுத்துக்காட்டாக வேளாளர்களைக் கங்கையின் புத்திரரென்றும் நாடார்களை சத்தி முனியின் புத்திரரென்றும் இடங்கை வகுப்பினர் கச்சியப முனிவர் தென்னாட்டுக்கு வந்தபோது, அவரது ஓம குண்டத்தில் தோன்றி அவருடைய செருப்புகளைத் தாங்கிக்கொண்டு வந்தவர்களென்றும் எழுதிவைத்தார்கள்.&lt;a title="" style="mso-endnote-id: edn28" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_edn28" name="_ednref28"&gt;[xxviii]&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலக்கிழார்களுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு ஆதரவாகவும் பிராமணர்கள் புனைந்து எழுதிய கருத்துக்களை மனதிற்கொண்டுதான் வலங்கை, இடங்கைப் பிரிவினையைப் பிராமணர்கள் ஏற்படுத்தினார்கள் என்று மா.ச. ஆசாரியார் சொல்லுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய சான்றுகளிலிருந்து கம்மாளர் தமது சாதி சமத்துவப் போராட்டங்களுக்கு ஏற்ற கருத்துக்களை எவ்வாறு உருவாக்கிக்கொண்டனர் என்பது விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1. தங்கள் உற்பவம் பஞ்சமுகப் பிரம்மாவினிடமிருந்து என்று கூறுவதற்கு அவர்கள் யசுர் வேதத்தைப் பயன்படுத்துகிறார்கள். எல்லாத் தொழில்களும் பிரம்மாவின் சிருஷ்டியாகையால் சாதிகள் சமமானவை என்று கூறுகிறார்கள்.&lt;br /&gt;2. உழைப்பே உலக சம்ரட்சணைக்குக் காரணமென்றும் அதனைச் செய்வோரே சிருட்டிக் கர்த்தாவான பிரம்மாவின் வம்சமென்றும் வாதாடுகிறார்கள்.&lt;br /&gt;3. உழைப்பைத் தாழ்மையானது என்று கூறுவதை அவர்கள் எதிர்க்கிறார்கள்.&lt;br /&gt;4. புராணங்கள் திருமூர்த்தியின் தோற்றத்தை மாறுபடக் கூறுவதால் அவை யாவும் பொய்யென்று கூறுகிறார்கள்.&lt;br /&gt;5. சாதிகள் தோன்றாத காலத்தில் மனித சமத்துவக் கருத்துக்களைக் கூறும் ரிக்வேதத்தையும் உழைப்பைப் போற்றுகிற யசுர் வேதத்தைம் இவர்கள் தங்கள் சாதிசமத்துக் கருத்துக்களை உருவாக்கப் பயன்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;6. புராணங்களைப் பொய்யென்று இவர்கள் கருதினாலும், பிராமணர்கள் சாதி உயர்வு தாழ்வுகளுக்கு அவற்றையே ஆதாரம் காட்வதால், பிராமணர்கள் குலமுதல்வர்களான ரிஷிகளின் தோற்றம் இழிவான சாதியோடு தொடர்புடையது, அவர்கள் சங்கர சாதியாரென்று காட்ட அதே புராணங்களைப் பயன்படுத்துகிறார்கள். இதைப் பிராமணர்கள் மறுக்க முடியாது.&lt;br /&gt;7. மனுஸ்மிருதி, சாதி ஏற்றத் தாழ்வுகள் நிலை பெற்றுவிட்ட பின்பு, அவற்றை நிலைநிறுத்த வருணாச்சிரம ஒழுக்க விதிகள் கூறுவதால் அதனையும் இவர்கள் எதிர்க்கிறார்கள்.&lt;br /&gt;8. உழைப்பை இவர்கள் உயர்வெனக் கருதுவதால் எல்லோருக்கும் உணவளிக்கும் சூத்திரர்களும் சிறந்த குலத்தவரென்றும் வேத முதலிய ஞான நூல்களைப் படிக்கும் உரிமையுடையவர்களென்றும் கூறுகிறார்கள்.&lt;br /&gt;9. சாதி சமத்துவக் கொள்கைகளை உறுதியாக வாதிக்கும் கபிலரகவலை இவர்கள் தங்கள் கருத்துக்களை அரண் செய்யப் பயன்படுத்துகிறார்கள். வேளாளர், கார்காத்தார் முதலிய பிராமணரல்லாத உயர் சாதியினர் அப்பாடலின் பிராமண உயர்வை எதிர்க்கும் பகுதியோடு உடன்படுகின்றனர். மனிதகுலம் சாதியால் வேறுபடக்கூடாது என்ற கருத்தை இவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் தங்களுக்கு மேல் ஒரு சாதி இருக்கக்கூடாது என்று கருதுகின்றனரேயன்றி, சாதி அமைப்பில் தங்களுடைய ஸ்தானத்தைவிட்டு இறங்கிச் சாதியால் உயர்வு தாழ்வு இல்லை என்று ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இணைப்பு&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கபிலரகவல்&lt;br /&gt;&lt;br /&gt;(57ஆவது அடி முதல் பாடல் முடிவு வரை)&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பன மாந்தர்கள் பகர்வது கேண்மின்&lt;br /&gt;இறந்தவ ராயுமை இவ்விட மிருத்திப்&lt;br /&gt;பாவனை மந்திரம் பலபட வுரைத்தே&lt;br /&gt;உமக்கவர் புத்திரர் ஊட்டின போது&lt;br /&gt;அடுபசியாற் குலைந்து ஆங்கவர் மீண்டு&lt;br /&gt;கையேந்தி நிற்பது கண்டதார் புகல்வீர்.&lt;br /&gt;அருந்திய உணவால் யார்பசி கழிந்தது?&lt;br /&gt;ஒட்டியர் மிலேச்சர் ஊணர் சிங்களர்&lt;br /&gt;இட்டிடைச் சோனகர் யவனர் சீனத்தர்&lt;br /&gt;பற்பலர் நாட்டிலும் பார்ப்பார் இல்லையால்.&lt;br /&gt;முற்படைப் பதனில் வேறாகிய முறைமைபோல்&lt;br /&gt;நால்வகைச் சாதியின் னாட்டினில் நாட்டினீர்.&lt;br /&gt;மேல்வகை கீழ்வகை விளங்குவ தொழுக்கால்.&lt;br /&gt;பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே&lt;br /&gt;அவ்விரு சாதியில் ஆண்பெண் மாறி&lt;br /&gt;கலந்து கருப்பெறல் கண்டதும் உண்டோ?&lt;br /&gt;ஒருவகைச் சாதியாய் மக்கட் பிறப்பில்&lt;br /&gt;இருவகை யாகநீர் இயம்பிய குலத்தில்&lt;br /&gt;ஆண்பெண் மாறி அணைதலும் அணைந்தபின்&lt;br /&gt;கருப்பொறை உயிர்ப்பதும் காண்கி லீரோ?&lt;br /&gt;எந்நிலத் தெந்தவித் திடப்படு கின்றதோ&lt;br /&gt;அந்நிலத் தந்த வித்தங் குதித்திடுமால்&lt;br /&gt;மாறி வேறாகும் வழக்குமு மிலையே.&lt;br /&gt;பூசுரர் புணர்ந்து புலைச்சியர் ஈன்ற&lt;br /&gt;புத்திர ராயினோர் பூசுரர் அல்லரோ?&lt;br /&gt;பெற்றமும் எருமையும் பேதமாய்த் தோன்றல்போல்&lt;br /&gt;மாந்தரில் பேதமாம் வடிவெவர் கண்டுளார்?&lt;br /&gt;வாழ்நாள் உறுப்புமெய் வண்ணமோடு அறிவினில்&lt;br /&gt;வேற்றுமை யாவது வெளிப்பட லின்றே.&lt;br /&gt;தென்திசைப் புலையன் வடதிசைக் கேகில்&lt;br /&gt;பழுதற வோதிப் பார்ப்பா னாவான்.&lt;br /&gt;வடதிசைப் பார்ப்பான் தென்திசைக் கேகில்&lt;br /&gt;நடையது கோணிப் புலையன் ஆவான். அது நிற்க.&lt;br /&gt;சேற்றிற் பிறந்த செந்தாமரை போல&lt;br /&gt;பிரமற்கு கூத்திவயிற் றில்பிறந்த வசிட்டரும்&lt;br /&gt;வசிட்டர்க்குச் சண்டாளி வயிற்றில் பிறந்த சத்தியரும்&lt;br /&gt;சத்தியர்க்குப் புலைச்சி தோள்சேர்ந்து பிறந்த&lt;br /&gt;பராசரரும் பராசரர்க்கு மீன்வா ணிச்சி&lt;br /&gt;வயிற்றில் பிறந்த வியாசர்இந் நால்வரும்&lt;br /&gt;வேதங்க ளோதி மேன்மைப் பட்டு&lt;br /&gt;மாதவ ராகி வயங்கின ரன்றோ?&lt;br /&gt;அருந்தவ முனியா னபக வதற்கு&lt;br /&gt;கருவூர் பெரும்பதி கட்பெரும் புலைச்சி&lt;br /&gt;ஆதி வயிற்றில் அன்றவ தரித்த&lt;br /&gt;கான்முளை யாகிய கபிலனும் யானே&lt;br /&gt;என்னுடன் பிறந்தவர் எத்தனை பேரெனில்&lt;br /&gt;ஆண்பால் மூவர் பெண்பால் நால்வர்.&lt;br /&gt;யாம்வளர் திறம்சிறிதி யம்புவல் கேண்மின்.&lt;br /&gt;ஊற்றுக் காடெனம் ஊர்தனில் தங்கிய&lt;br /&gt;வண்ணார் அகத்தினில் உப்பை வளர்ந்தனள்&lt;br /&gt;காவிரிப்பூம் பட்டினத்தில் கள்விலைஞர் சேரியில்&lt;br /&gt;சான்றோர் அகந்தன்னில் உறுவை வளர்ந்தனர்&lt;br /&gt;நரம்புக் கருவியோர் நண்ணிடும் சேரியில்&lt;br /&gt;பாணர் அகந்தன்னில் ஔவை வளர்ந்தனள்&lt;br /&gt;குறவர் கோமான் கொய்தினைப் புனஞ்சூழ்&lt;br /&gt;வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள்&lt;br /&gt;தொண்டை மண்டலத்தில் வண்டமிழ் மயிலைப்&lt;br /&gt;பறையர் இடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்&lt;br /&gt;அரும்பார் சோலை சுரும்பார் வஞ்சி&lt;br /&gt;அதிக னில்லிடை அதிகமான் வளர்ந்தனர்&lt;br /&gt;பாரூர் நீர்நாட் டாரூர் தன்னில்&lt;br /&gt;அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன். ஆதலால்,&lt;br /&gt;மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?&lt;br /&gt;காற்றும் சிலரை நீக்கி வீசுமோ?&lt;br /&gt;மாநிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ?&lt;br /&gt;கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ?&lt;br /&gt;வாழ்நான்கு சாதிக்கு உணவு நாட்டிலும்&lt;br /&gt;கீழ்நான்கு சாதிக்கு உணவு காட்டிலுமோ?&lt;br /&gt;திருவும் வறுமையும் செய்தவப் பேறும்&lt;br /&gt;சாவதும் வேறித் தரணி யோர்க்கே.&lt;br /&gt;குலமும் ஒன்றே குடியும் ஒன்றே&lt;br /&gt;இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே&lt;br /&gt;வழிபடு தெய்வமும் ஒன்றே யாதலால்&lt;br /&gt;முன்னோர் உரைத்த மொழிதவ றாமல்&lt;br /&gt;எந்நாளா யினும் இரப்பவர்க் கிட்டு&lt;br /&gt;புலையும் கொலையும் களவும் தவிர்ந்து&lt;br /&gt;நிலைபெற வரத்தி நிற்பதை அறிந்து&lt;br /&gt;ஆணும் பெண்ணும் அல்லதை உணர்ந்து&lt;br /&gt;பேணி யுரைப்பது பிழையெனப் படாது&lt;br /&gt;சிறப்பும் சீலமும் அல்லது பிறப்பு&lt;br /&gt;நலந் தருமோ பேதை யீரே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;அடிக்குறிப்புகள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;சங்ககாலச் சாதிகள் தொழிலடிப்படையிலேயே இருந்தன. உ.வே.சாமிநாதய்யர் புறநானூறு முகவுரையில் சாதிகளின் பட்டியல் ஒன்று தருகிறார். அப்பெயர்கள் இவ்வுண்மைக்குச் சான்றாகக் காணப்படுகின்றன.&lt;br /&gt;அந்தணர், அரசர், அளவர், இயவர், இடையர், உப்பு வாணிகர், உமணர், உழவர், எயிற்றியர், கடம்பர், கடைசியர், கம்மியர், களமர்; கிணைஞர், கிணைமகள், குயவர், குறத்தியர், குறவர், குறும்பன், கூத்தர், கொல்லர், தச்சர், தேர்ப்பாகர், துடியர், நுளையர், பரதவர், பறையர், பாடினி, பாணர், பாணிச்சி, புலையர், பூண்செய்கொல்லர், பொது விலை மகளிர், பொருநர், மடையர், மழவர், யாழ் புலவர், யானைப் பாகர், யானை வேட்டுவர், வண்ணாத்தி, வணிகர், விலைஞர், விலைப்பெண்டிர், வேடர்.&lt;br /&gt;சங்கச் செய்யுள்களிலேயே நால்வகைப்பட்ட சாதியமைப்பைப் பற்றிக் குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில் வருண பூதங்களைப் பற்றிய வருணனை இக்கருத்தின் முதிர்ச்சியைக் காட்டும்.&lt;br /&gt;பின் விவரிக்கப்படும் சாதி வரலாற்றுக் கதைகளைத் தவிர, நாடார் சாதி வரலாற்றைப் பற்றி Journal of Tamil Studies (May 1969) 1 - 1 இல் ராபர்ட் ஹார்ட் கிரேவ் குறிப்பிடுகிறார். திருநெல்வேலிக் கிறித்தவர்கள் 1851 முதல் 1918 வரை எழுதிய நாடார்கள் வரலாற்றுக் காதைகளையும் சர்குணர் எழுதிய நாடார்கள் வரலாற்றையும் அவர் ஆராய்கிறார். நாடார்களைப் பாண்டிய மன்னர்களின் மரபினர் என்று நிரூபிக்க அவர்கள் முயலுகிறார்கள்.&lt;br /&gt;மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள், வெ. ப. சுப்பிரமணிய முதலியார், சி. கே. சுப்பிரமணிய முதலியார் முதலியவர்களது நூல்களில் இக்கருத்துக்களைக் காணலாம்.&lt;br /&gt;வருணசிந்தாமணி (1901), கூடலூர் கனகசபை பிள்ளை. இந்நூலை வெளியிட வேளாளர் சாதிகளைச் சேர்ந்த செல்வர்கள் நன்கொடையளித்துள்ளார்கள். இச்செய்தி நூலின் முகவுரையில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;வருணசிந்தாமணி, முகவுரை.&lt;br /&gt;வருணசிந்தாமணி, 1, 3, 7 அத்தியாயங்கள்.&lt;br /&gt;க்ஷத்திரிய குல விளக்கம் (1904), டி. வி. துரைசாமி கிராமணி.&lt;br /&gt;நாடார் மன்னரும் நாயக்க மன்னரும் (1931), இராமலிங்கக் குருக்கள், குமரைய நாடார்.&lt;br /&gt;நாடார் மன்னரும் நாயக்க மன்னரும்.&lt;br /&gt;அகஸ்தீஸ்வரம் ஆறுமுக நாடார் தொகுத்து வைத்திருக்கும் நாடார் நாட்டுப் பாடல்களில் கலியாண வாழ்த்துப் பிரிவில் காணப்படும் பாடல்கள்.&lt;br /&gt;பரவர் புராணம் (1909), அருளப்ப முதலியார், இந்நூலை வெளியிட நன்கொடை அளித்தவர்கள் ஆறு பரத குலச் செல்வர்கள் என்பதை நூலின் முகவுரையில் காணலாம்.&lt;br /&gt;பள்ளர்களைப் பற்றிய சாதி வரலாற்று நாட்டுப் பாடல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆயினும், தி. நா. சுப்பிரமணியன் தொகுத்த 'தென்னிந்தியக் கோயில் சாசனங்கள்' மூன்றாவது தொகுப்பில் திருமலை நாயக்கன் காலத்தில் பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் இடையே ஏற்பட்ட உரிமை வழக்குகளில், மன்னன் தீர்ப்பு வழங்கிய செய்திகள் காணப்படுகின்றன. அச்சாசனங்களில் காணப்படும் கதைகள் பள்ளர்களது மரவு வழிப்பட்ட வரலாற்றுக் கதைகளின் அடிப்படையில் எழுந்தனவாக இருத்தல் வேண்டும்.&lt;br /&gt;Lokayatha, D. P. Chattopadhyaya.&lt;br /&gt;மணிமேகலை, 13.&lt;br /&gt;நீலகேசி, வேதவாதச் சருக்கம்.&lt;br /&gt;கபிலரகவல். இப்பாடலில் சாதி சமத்துவம் பற்றிக் கூறும் பகுதி இக்கட்டுரையின் இறுதியில் பிற்குறிப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது. சாசனங்களின் மூலம் சில உரிமைகளுக்காகக் கீழ்நிலைச் சாதியினருக்குள் வழக்குகள் நடந்ததாக அறிகிறோம். அவ்வுரிமைகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் சில விவரங்களைச் சாசனங்கள் கூறுகின்றன. எடுத்துக்காட்டாகத் திருமணத்தின்போது எத்தனை பந்தற் கால்கள் நடுவது, மண ஊர்வலத்தில் எத்தனை குடைகள் பிடிப்பது, எத்தனை சங்குகள் ஊதுவது, எத்தனை வாத்தியங்கள் வாசிப்பது, எத்தனை தவுல்கள் அடிப்பது, சாவுச் சடங்குகளில் எத்தனை சங்கு ஊதுவது, எத்தனை குடங்களில் நீர் கொண்டு வருவது, நடைபாவாடை விரிக்கலாமா? கூடாதா? என்ற இவை போன்ற உரிமைகளுக்காக வழக்குகள் நடைபெற்றுள்ளன.&lt;br /&gt;சித்தூர் அதலாத்துக் கோட்டுத் தீர்ப்பு, இந்நூல் 1924இல் வெளியிடப்பட்டது. இதன் முதற்பதிப்பு பல ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிட்டப்பட்டிருந்தது. இரண்டாம் பதிப்பை கன்னியா பிள்ளை என்பவர் சென்னை விஸ்வப் பிரம்ம சபையினரின் பிரதிக்கிணங்க வெளியிட்டார். இது இக்குறிப்பு நூலின் முகவுரையில் காணப்படுகிறது.&lt;br /&gt;தென்னிந்தியக் கோயில் சாசனங்கள், தி. நா. சு. முகவுரை.&lt;br /&gt;தென்னிந்தியக் கோயில் சாசனங்கள், தி. நா. சு. முகவுரை.&lt;br /&gt;வருணசிந்தாமணி, 'சூத்திரர் யார்?' என்ற பகுதி.&lt;br /&gt;பஞ்சப்பிரம்மாக்களின் உற்பத்தி பற்றி யசுர்வேதம் கூறுகிறது. படைப்புச் சக்தியை விஸ்வப்பிரம்மா என்றும் அதன் ஐந்து வித வெளிப்பாடுகளான தொழில்கள் பஞ்ச முகப் பிரம்மாவென்றும் தனித்தனியாக அத்தொழில்களின் அதிதேவதைகளாக ஐந்து ரிஷிகள் தோன்றினார்களென்றும் யசுர் வேதக் கதை சொல்லுகிறது. அத்தொழில்களைப் பரம்பரையாகச் செய்துவரும் பஞ்ச கருமார்களே இவ்வைந்து ரிஷிகளின் வழித்தோன்றல்கள் என்பது அவர்களது வாதம். தாங்கள் சுத்த ரிஷிகளின் வம்சம் என்றும் தற்காலப் பிராமணர் சங்கர சாதியினர் என்பதும் அவர்கள் கூற்று. சங்கர சாதியாரென்றால் கலப்புச் சாதியார் என்பது பொருள். இதனால் தாங்கள் பிராமணரைவிட உயர்ந்த குலத்தவர் என்பது அவர்களுடைய வாதம்.&lt;br /&gt;இரும்பு, செம்பு, கல், மரம் முதலிய பொருள்களைப் பயன்படுத்திச் செய்யும் தொழில்கள் இழிவான (நித்கிருஷ்டமான) தொழில்கள் என்று குண்டையன் கூறினான். வாதிகளோ, படைப்புத் தொழிலும் காப்புத் தொழிலும் இத்தொழில்களின் அடிப்படையில்தான் நடைபெறுவதாகவும் கருவிகளும் ஆயுதங்களுமே உலக வாழ்க்கைக்கும் அரசு நிலைப்பதற்கும் அடிப்படையென்றும் மா. ச. ஆசாரி வாதாடுகிறார். தங்களது தொழில்களால் உலகம் இயங்குவதால் தங்கள் தொழில்கள் படைப்புக் கடவுளான திருமாலின் தொழிலுக்கும் சமமானவை என்று சொல்லுகிறார்கள்.&lt;br /&gt;இக்கதைகள், மணிமேகலையில் ஒரு பகுதியும் கபிலரகவலில் மற்றோர் பகுதியும் காணப்படுகின்றன.&lt;br /&gt;இப்பகுதியில் காணப்படும் யசுர்வேத மொழிபெயர்ப்பு வருணசிந்தாமணியில் காணப்படுகிறது.&lt;br /&gt;தென்னிந்தியக் கோயில் சாசனங்கள், தி. நா. சு. முகவுரை.&lt;br /&gt;சோழன் பூர்வ பட்டயம், Oriental Manuscripts Library Series.&lt;br /&gt;பேராசிரியர் கே. கே. பிள்ளை தமது தென்னிந்திய வரலாற்றில் இடங்கைச் சாதிகளுக்குக் கிடைத்தத சில சலுகைகளைப் பற்றி மேற்கண்ட பட்டயத்தைச் சான்று காட்டி எழுதுவதாவது:&lt;br /&gt;கம்மாளர்களுக்கு அரசர் வழங்கிய உரிமைகளைப் பற்றி ஒரு கல்வெட்டுக் கூறும் செய்தியின் பிரதிகள் கரூர், பேரூர், மொடக்கூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. அந்நாளிலிருந்து கம்மாளரின் திருமண விழாக்களிலும் சாதி பற்றிய சடங்குகளிலும் இரட்டைச் சங்கும் கொட்டும் முழக்கலாமென்றும் அன்னோர் செருப்புகள் அணியலாம் என்றும் அவரது வீட்டுச் சுவர்களில் வெண்சாந்து பூசலாம் என்றும் சில உரிமைகளைக் கொடுத்தாக அது குறிப்பிடுகிறது.&lt;br /&gt;28. கே. கே. பிள்ளை, தென்னிந்திய வரலாறு.&lt;br /&gt;தம் குலமே உயர்ந்ததெனக் காட்டுவதற்ககாகப் பழங் காலத்தில் தாம் உயர்குலத்தவர்களோடு தொடர்புடையவரெனக் கதைகள் புனையத் தொடங்கினர். இடங்கைச் சாதியினர் தமது அக்கினி குண்டப் பிறப்பைப் பற்றிக் கதை கட்டினர். இதைப் பற்றிய செய்தி மூன்றாம் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.&lt;br /&gt;ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதி உயர்ந்ததெனக் காட்வதற்குப் பல புதிய கற்பனைக் கதைகளை உருவாக்கினர். அவற்றில் தாங்கள் பிராமணர்களுக்குச் சமமானவர் என்று நிலைநாட்ட முயன்றனர். இதை எதிர்த்துப் பிராமணர்களும் தங்களுக்குப் பிற வகுப்பினர் கீழ்ப்பட்டவர்களே எனக் காட்டும் கதைகளை எழுதினர். அக்கினிக் குண்டக் கதை இடங்கைச் சாதியினரால் எழுதப்பட்டிருக்க முடியாது. இக்கதை அவர்கள் நிலையை உயர்த்துவதற்குப் பதிலாகப் பிராமணர்களின் செருப்பைத் தாங்கி வந்த நிலைக்குத் தாழ்த்துகிறது. இக்கதை பிராமணர் உயர்வை நிலைநாட்ட பிராமணர்களால் எழுதப்பட்டதாகவே இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நூலடைவு&lt;br /&gt;&lt;/strong&gt;இலக்கிய நூல்கள்&lt;br /&gt;புறநானூறு&lt;br /&gt;சிலப்பதிகாரம்&lt;br /&gt;மணிமேகலை&lt;br /&gt;நீலகேசி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கல்வெட்டுச் சான்றுகள்&lt;br /&gt;&lt;/strong&gt;தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் (3 பாகங்கள்), தி. நா. சுப்பிரமணியன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாதி வரலாற்று நூல்கள்&lt;br /&gt;&lt;/strong&gt;நாடார் மன்னரும் நாயக்க மன்னரும், 1931, ராமலிங்கக் குருக்கள், குமரையா நாடார்.&lt;br /&gt;க்ஷத்திரிய குல விளக்கம், T. V. துரைசாமி கிராமணி.&lt;br /&gt;வருணசிந்தாமணி, 1901, கூடலூர் கனகசபைப்பிள்ளை.&lt;br /&gt;பரவர் புராணம், 1909, அருளப்ப முதலியார்.&lt;br /&gt;பரத பாண்டியர் வரலாறு, லியோன் பரத பண்டிதர்.&lt;br /&gt;வலங்கையர் கதை (நாட்டுப்பாடல் பிரதி), ஆறுமுகசாமி நாடார் எழுதிவைத்திருப்பது.&lt;br /&gt;வெங்கலராசன் கதை, 1968, (நாட்டுப் பாடல்) நாகர்கோவில், ஆறுமுகசாமி நாடார் அச்சிட்டது.&lt;br /&gt;சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு, 1924, கன்னியாபிள்ளை வெளியிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வரலாற்று நூல்கள் - சமுதாயவியல் நூல்கள்&lt;br /&gt;&lt;/strong&gt;The History of the Nayaks of Madurai, Prof. Satyamoorthy.&lt;br /&gt;The Cholas, K. Neelakanta Sastry.&lt;br /&gt;A History of South India, K. Neelakanta Sastry.&lt;br /&gt;Caste and Caste Organisation, Prof. Huttan.&lt;br /&gt;Introduction to the study of Indian History, D. D. Kosambi.&lt;br /&gt;தென்னிந்திய வரலாறு, கே. கே. பிள்ளை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தத்துவம்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;Lokayatha, Debi Prasad Chattopadhyaya.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;Indian Philosophy, Debi Prasad Chattopadhyaya.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;Indian Thought, K. Damodaran.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;Development of Religious Thought in South India, S. Radhakrishnan.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5150995232087595379-8669195548875788069?l=noolatukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://noolatukku.blogspot.com/feeds/8669195548875788069/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5150995232087595379&amp;postID=8669195548875788069&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5150995232087595379/posts/default/8669195548875788069'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5150995232087595379/posts/default/8669195548875788069'/><link rel='alternate' type='text/html' href='http://noolatukku.blogspot.com/2009/02/blog-post.html' title='தமிழ் நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்'/><author><name>தளிர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5150995232087595379.post-3081487227941354349</id><published>2009-01-30T19:58:00.000-08:00</published><updated>2009-01-29T20:18:11.440-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கையறுநிலை'/><title type='text'>வாழ்க்கை வழிகாட்டி</title><content type='html'>&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;கா. ந. அண்ணாதுரை, க. மு.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியார் என்ற பெயருடன் தென் ஆப்பிரிக்காவிலே முரட்டு வெள்ளையர்களுக்கு எதிராகச் சாத்வீகப் போராட்டம் நடத்திய காலத்திலும் நாட்டுத் தலைவராகி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்திய பல போராட்டங்களின்போதும் சிறைச்சாலையிலேயும் நாட்டு மக்களின் உள்ளத்திலே தூய்மையை உண்டாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் பலமுறை உண்ணாவிரதம் இருந்த காலங்களிலும் அவர் சென்ற ரயிலைக் கவிழ்க்க முயற்சித்தபோதும் வெறியன் வெடிகுண்டு வீசியபோதும் ஆபத்து அவரை நோக்கி வந்தது. அவ்வளவு ஆபத்துகளிலிருந்தும் அவர் தப்பினார். "ஒவ்வோர் சமயமும் அவர் உயிருக்குப் பேராபத்து வந்துவிடுமோ?" என்று நாடு கலங்கிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பாராத ஆபத்து எவரும் கனவும் கண்டிராத விதத்தில் ஏற்பட்டு அவர் உயிர் துறக்க நேரிட்டது கயவனின் கைத்துப்பாக்கியினால்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மார்க்கத்தின் மாசு துடைத்து, அதற்குப் புதிய மாண்பு ஏற்படுத்துவதற்காகவும் அந்த மார்க்கத்தை சூதுக்கும் சுயநலத்துக்கும் ஆதிக்கத்துக்கும் சிலர் பயன்படுத்திக்கொள்ளும் கொடுமையை நீக்குவதற்காகவும் பாடுபட்டவர்களை அந்த மதத்தைக் கெடுக்கிறவர்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டு கேவல புத்தி படைத்தவர்கள் கருத்து வேற்றுமையைச் சாக்காகக்கொண்டு காட்டுமிராண்டித்தனத்தைக் கையாண்டு படுகொலை பல செய்துள்ளனர். மதச் சீர்திருத்தவாதிகளின் வரலாறுகள் இத்தகைய சோகச் சம்பவங்களையே நிரம்பக் கொண்டவையாக இருக்கக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மார்க்கத்துக்கு அவர் செய்ய எண்ணிய திருத்தங்களை மத வெறிகொண்டோரும் ஆதிக்கக்காரர்களும் விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சில காலமாகவே வடநாட்டிலே சில பத்திரிகைகளில் காந்தியார் மீதும் அவர் சகாக்கள் மீதும் பலாத்கால வெறிச் செயல்களைத் தூண்டும் முறையிலேயே கூட எழுதப்பட்டு வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய மாலை நேரப் பிரார்த்தனைக் கூட்டங்களிலே சென்று கலகம் விளைவிக்கவும் அவர் இந்து மார்க்கத்தைக் கெடுக்கிறார் என்று கூச்சலிடவும் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டோர் நாள், இந்தச் செயல்களின் காரணமாக அவருடைய பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெறாமலே கூடப் போயின.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பிரார்த்தனைக் கூட்டத்திலும் அவர் இந்தத் தவறான போக்கை விளக்கி அன்பும் விவேகமும் மலர வேண்டும் என்று அறிவுரை கூறியபடியே இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே முறையிலே தமது அரிஜன் பத்திரிக்கையிலும் எழுதிக்கொண்டிருந்தார். தமது நோக்கத்தின் தூய்மையை விளக்கி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறியர்கள் திருப்தி கொள்ளவில்லை. வெளிப்படையாகவே இது தெரியலாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னாட்களுக்கு முன்பு அவர் நாட்டு மக்களின் அகத்தூய்மையைக் கோரி, உண்ணாவிரதமிருந்தார். ஆபத்தான நிலை. அந்த சமயத்திலே அவர் தங்கிருந்த பிர்லா மாளிகை முன் ஒரு சிறு வெறிக்கும்பல் கூடி 'அவர் சாகட்டும்' என்று கூவிற்று. அது சமயம் அங்கு வந்திருந்த பண்டித நேரு பதறிப்போனார். அந்தக் குப்பலைக் கண்டித்து துரத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகோர் நாள், பிரார்த்தனைக் கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் வேறோர் பித்தன் வெடிகுண்டு வீசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பிறகோர் நாள், பண்டித நேருவின் கூட்டத்தில் வெடிகுண்டும் கையுமாக மற்றொருவன் பிடிபட்டான். அவன் ஒரு சீக்கியன் என்று செய்தி கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளுக்கெல்லாம் முன்னே, அன்பர் ராஜகோபாலச்சாரியாரின் மோட்டார் மீது எவனோ ஒருவன் சுட்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கோரக் கொலை நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, பிர்லா மாளிகையிலே அவர் தங்கியிருந்த அறையின் பக்கம் எவனோ ஒருவன் நுழைந்து, "யார்? என்ன?" என்று கேட்டபோது பேந்தப் பேந்த விழித்தான் என்று சேதி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பலவிதமான முயற்சிகளைச் செய்து வந்தனர் பாதகர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில், பிரார்த்தனைக் கூட்டத்தில் அவருக்கு எதிரே நின்று, திரளான மக்கள் கூடியிருந்த மன்றத்தில், கைத்துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டான் காதகன்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய படுகொலைகள் மூலம் ஆதிக்கத்தைப் புகுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் வேலை செய்யும் ஒரு சதிகாரக் கும்பல் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. சர்க்கார் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருப்பதுடன் நாடெங்கும் எவ்விதமான நிலைமையையும் சமாளிக்கத்தக்க முன்னேற்பாடுகளையும் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் துக்ககரமான சம்பவத்தால் நாடு தன் நிதானத்தை இழந்துவிடக் கூடாது என்பதுதான் நானிலமெங்குமுள்ள நல்லறிவாளர்களின் வேண்டுகோள்; அறவுரை.&lt;br /&gt;&lt;br /&gt;சதிச்செயலைக் கண்டுபிடித்து, அவர்களைச் சட்டம் தண்டிக்கும். சர்க்காருக்கு அதற்கான சக்தியும் திறமையும் இருக்கிறது. நமது ஒற்றுமையுடன் கூடிய நிலை அதற்குப் பக்கபலமாக நிற்க வேண்டும். ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலையைப் பெற்று அந்த சாசனத்தைத் தயாரிக்கும் அரும்பணியிலே ஈடுபட்டு அமைச்சர்கள் தமது அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் சுழல் துப்பாக்கியைக்கொண்டு அவ்வளவு பேரையும், ஏழு அமைச்சர்களையும், சுட்டுக் கொன்றான் பர்மாவில் சில காலத்துக்கு முன்பு. இன்றும் குண்டு பாய்ந்த அந்தச் சடலங்களை வைத்துக்கொண்டுள்ளனர். அமைச்சர்களை, அவர்களின் தலைவர் அவுங்சானைச் சுட்டு வீழ்த்தினால் அரசு கவிழ்ந்துவிடும் என்று அறிவிலிகள் எண்ணினர். ஆனால் பர்மா நிதானம் தவறாமல், துக்கத்திலே தன் மனதைப் பறிகொடுத்துவிடாமல், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கடமையைச் செய்து வருகிறது. அது நம் அண்டை நாடு. சிறிய நாடுதான். அந்தச் சிறிய நாடு காட்டிய பெரிய உறுதி நமக்கும் வேண்டும். மனக்குழப்பம் மனமாச்சரியம் எழக் கூடாது. உலகின் கண்கள் நம் மீது பாய்ந்துள்ள நேரம். உரிமை கிடைத்துள்ள வேளை. உலுத்தர் சிலரின் செயலால் உள்ளம் கெட்டுவிட இடந்தராமல் உறுதியுடன் நின்று நாட்டுநிலையைக் காப்பாற்றுவோமாக&lt;br /&gt;&lt;br /&gt;(காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட 30.1.1948ஆம் நாள் எழுதப்பட்டது)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5150995232087595379-3081487227941354349?l=noolatukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://noolatukku.blogspot.com/feeds/3081487227941354349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5150995232087595379&amp;postID=3081487227941354349&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5150995232087595379/posts/default/3081487227941354349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5150995232087595379/posts/default/3081487227941354349'/><link rel='alternate' type='text/html' href='http://noolatukku.blogspot.com/2009/01/blog-post_29.html' title='வாழ்க்கை வழிகாட்டி'/><author><name>தளிர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5150995232087595379.post-5800309360807222494</id><published>2009-01-28T04:12:00.000-08:00</published><updated>2009-01-28T04:36:00.638-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>ஞானத்தின் தனிச்சிறப்பு</title><content type='html'>வெள்ளத்தே போகாது; வெந்தணலில் வேகாது;&lt;br /&gt;கொள்ளத்தான் போகாது;  கொடுத்தாலும் குறையாது;&lt;br /&gt;கள்ளருக்கு மெட்டாது;  காவலுக்கு ளமையாது; &lt;br /&gt;உள்ளத்தே பொருளிருக்க வூரிலுழைத் துழல்வானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடியவர் பெயர்:  தெரியவில்லை&lt;br /&gt;(திருநெல்வேலி திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் எம்.ஏ., எம்.எல்., அட்வகேட் இயற்றிய உரையுடன் சென்னை ந. இரத்தின நாயகர் ஸன்ஸ் அவர்களால் 1950ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிடப்பட்ட பல வித்துவான்கள் பாடிய தனிப்பாடற்றிரட்டு மூலமும் உரையும் இரண்டாம் பாகம் பக்கம் 386)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5150995232087595379-5800309360807222494?l=noolatukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://noolatukku.blogspot.com/feeds/5800309360807222494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5150995232087595379&amp;postID=5800309360807222494&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5150995232087595379/posts/default/5800309360807222494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5150995232087595379/posts/default/5800309360807222494'/><link rel='alternate' type='text/html' href='http://noolatukku.blogspot.com/2009/01/blog-post_28.html' title='ஞானத்தின் தனிச்சிறப்பு'/><author><name>தளிர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5150995232087595379.post-4701714818869795047</id><published>2009-01-24T03:14:00.001-08:00</published><updated>2009-01-24T03:17:39.459-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ஒலிபெருக்கி மதம்</title><content type='html'>திரியினைக்கொளுத்தி&lt;br /&gt;ஒளிநாடகமாடும்&lt;br /&gt;கறுப்புச்சுடர்&lt;br /&gt;விட்டிலைப்பொசுக்கி&lt;br /&gt;வாய்மைப்பொய் பேசுகிறது&lt;br /&gt;&lt;div align="right"&gt;- யரலவழள&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5150995232087595379-4701714818869795047?l=noolatukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://noolatukku.blogspot.com/feeds/4701714818869795047/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5150995232087595379&amp;postID=4701714818869795047&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5150995232087595379/posts/default/4701714818869795047'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5150995232087595379/posts/default/4701714818869795047'/><link rel='alternate' type='text/html' href='http://noolatukku.blogspot.com/2009/01/blog-post_5104.html' title='ஒலிபெருக்கி மதம்'/><author><name>தளிர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5150995232087595379.post-3708491332037635196</id><published>2009-01-24T03:07:00.000-08:00</published><updated>2009-01-24T03:31:55.248-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மார்க்சியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோழர் ஆட்சி'/><title type='text'>தமிழ் மன்னரும் சாதிப் பிரிவினைகளும்</title><content type='html'>நா. வானமாமலை&lt;br /&gt;&lt;br /&gt;சோழ மன்னர்கள் காலத்தில் இரண்டு வகையான சாதிப் பிரிவினைகளைப் பற்றிக் கல்வெட்டுகள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். முதல் ராசராசன் காலத்தில் 'வலங்கை பழம்படைகளிலார், பெருந்தனத்து வலங்கைப் பெரும்படையினகள், அழகிய சோழத் தெரிந்த வலங்கை வேளைகாரப் படைகள், ராஜராஜன் தெரிந்த வலங்கை வேளைக்காரர்' என்ற படைப் பிரிவுகளின் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ராசராசன் காலத்திற்குப் பிற்பட்ட கல்வெட்டுகளில், இடங்கை தொண்ணூற்றாறு, இடங்கைத் தொண்ணூற்றாறு சமயத் தொடகை என்ற பெயர்கள் காணப்படுகின்றன. பிற்காலச் சோழர்கள் சிலரது கல்வெட்டுகளில், மூன்றுகை மகாசேனை, மூன்றுகை திருவேளைக்காரர் என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இம்மூன்று பிரிவினரும் சாதி அடிப்படையில் அமைந்த பிரிவினரா, அன்றி வர்க்க அமைப்பில் எழுந்த பிரிவினரா என்ற வினா எழுகிறது. இவ்வினாவிற்கு விடை கூற இம்மூன்று பிரிவுகளிலும் எந்தெந்தச் சாதியினர் அடங்கியிருந்தனர், அவர்கள் எத்தொழில்களைச் செய்து வந்தனர் என்பதையும் அவர்களிடையே நிலவிய உறவையும் அறிந்துகொள்வது அவசியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வலங்கைப் பிரிவில் நிலம் உடையாரும் உழவர்களும் வண்ணான், நாவிதன் போன்ற தொழிலாளிகளும் பனைமரமேறும் தொழிலாளிகளும் வன்னியர் போன்ற தொழிலாளிகளும் இடையர் போன்ற கால்நடை பராமரிப்பவரும் அடங்கியிருந்தனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தெலுங்கும் கன்னடமும் வழங்கும் நாடுகளிலும் இப்பிரிவினர் உள்ளனர். இப்பிரிவிலுள்ள சாதிகளில் சிலவற்றை ஜார்ஜ் கோல்மன் என்னும் நீதிபதி 1809ஆம் ஆண்டில் தாமளித்த தீர்ப்பொன்றில் குறிப்பிடுகிறார். அவையாவன: குசவன், மேளக்காரன், சாணான், அம்பட்டன், கன்னான், இடையன், வெள்ளாளன், பறையன், குறவன், ஒட்டன், இருளன், வேடன், வேட்டுவன் முதலியன.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டயங்களிலும் காணப்பட்ட சான்றுகளின் அடிப்படையிலேயே, சற்றேறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவர் தம் தீர்ப்பால் இம்முடிவுக்கு வந்திருக்கிறார். இந்தச் சான்றுகளனைத்தும் நிலமுடையவர்களையும் நிலத்தில் பயிர் செய்யும் வகுப்பினரையும் அவர்களுக்கு ஊழியம் செய்யும் வகுப்பினரையும் குறிப்பிடுவதைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இடங்கைப் பிரிவில் அடங்கியுள்ள சாதியில் தொண்றூற்றாறு என்றும் நிகழ்ச்சிகள் குறிப்பிடுகின்றன. வீரராசேந்திர சோழனது திருவெண்காட்டுக் கல்வெட்டு ஒன்று இடங்கைச் சாதியினரிடமிருந்து, மன்னன் கொண்ட வரியைக் கோயிலுக்கு அளித்ததாகக் கூறுகிறது. அக்கல்வெட்டில் இடங்கைப் பிரிவில் அடங்கியுள்ள சாதிகள் சிலவற்றின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றைக் கவனிக்கும்பொழுது, அவை வணிகம் செய்வோரையும் தச்சன், கருமன் போன்ற தொழிலாளரையும் குறிப்பிடுகின்றன. தர்ஸ்டன் என்னும் ஆராய்ச்சியாளர் கீழ்வரும் சாதிகளை இடங்கைச் சாதிகளென்று குறிப்பிடுகிறார். அவைகளாவன: செட்டி, வாணியன், தேவாங்கன், கொத்தன், தட்டான், கன்னான், கொல்லன், சக்கிலியன் முதலானவையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றுகை மகா சேனையைப் பற்றி இத்தகைய விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. சாதிப்பிரிவுகளோடு அப்படைக்குத் தொடர்பு இருந்திருக்கும் என்று எண்ணுவதற்குச் சான்றுகள் இல்லை. இடங்கை, வலங்கை இவ்விரண்டு பிரிவிலும் அடங்காது மூன்றாம் பிரிவினர் ஆகிய அனைவரையும் கொண்ட மன்னனது நிலைப்படையாக இதனைக் கருதலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இக்கட்டுரையில் சாதிகளோடு தொடர்புடைய வலங்கை, இடங்கைப் பிரிவுகளுக்கும் மன்னர் ஆட்சிக்கும் இடையே இருந்த தொடர்புகளை மட்டும் விளங்குவோம். அதுவே மேற்குறித்த வினாக்களுக்கு விடையுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சோழர் ஆட்சி, முக்கியமாக நிலவுடைச் சுரண்டலை அடித்தளமாகக் கொண்டு நிலைத்திருந்தது என்று சென்ற கட்டுரையில் பார்த்தோம்.&lt;a title="" style="mso-footnote-id: ftn1" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_ftn1" name="_ftnref1"&gt;[1]&lt;/a&gt; இச்சுரண்டலை நிலைநிறுத்திக்கொள்ள அவர்கள் உள்நாட்டில் ஒரு சமூகத் தளத்தை நிறுவிக்கொள்ள அவசியமாயிருந்தது. உள்நாட்டில் அஸ்திவாரமில்லாமல் மக்களைச் சுரண்டுவதும் வெளிநாட்டுப் போர்களை நடத்துவதும் சாத்தியமல்ல. ஆகவே, ஒவ்வொரு காலத்தில் சிற்சில சலுகைகளைக் கொடுப்பதின் மூலம் ஒவ்வொரு பிரிவினரைத் தங்களோடு சேர்த்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதன்முதலில் நிலவுடைமைக்குப் பங்கம் வராமலிருக்கப் பெரும் பகுதி நிலங்களைக் கோயில்களுக்கு எழுதிவைத்து, அதன் மேற்பார்வையை நிலவுடைமையாளர்களுக்கு விட்டனர். ஊரிலுள்ள நிலவுடைமையாளர்களில் எந்தச் சாதியினர் அதிகமோ, அவர்களே ஊர்ச்சபையாகவும் மகாசபையாகவும் இருந்து, கோவில் நிலங்களை மேற்பார்வை செய்து வந்தனர். அரசர்களின் சமூகத் தளங்களில் இவ்வமைப்பு மிகவும் முக்கியமானது. ஆனால், நிலவுடைமையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. நிலத்தில் பாடுபடுபவர்களது ஆதரவைப் பெறுவதற்காக அவர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்பட்டன. நிலத்தில் பாடுபடாத வண்ணான், அம்பட்டன், மேளக்காரன் முதலியவர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால், நில உடமைச் சுரண்டல், கொடுமையாக இருந்தது என்பதை அக்காலத்தில் நடந்த அறப்போர்கள் காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு நிலவுடைமையாளர்களுக்கும் பயிர் செய்பவர்களுக்கும் அளிக்கப்பட்ட சலுகைகள் மூலம் அரசாங்கம் இழந்த வருமானத்தை, வணிகர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்களுக்கும் புதிய வரிகளை விதித்துச் சரிக்கட்டிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எடுத்துக்காட்டாகத் தமிழ் நாட்டில் இருந்து பெருவாரியான ஏற்றுமதியாக முத்து, தந்தம், பவளம், பாக்கு, சந்தனக்கட்டை, ஏலம், பளிங்குக் கல், துணி, பட்டு முதலிய வணிகப் பொருள்களுக்கு ராசராசன் காலத்திலிருந்து, சுங்கம் வசூலிக்கப்பட்டது. அக்காலத்தில் வணிகக் குழுக்களாக இருந்த வளஞ்சியம், மணிக்கிராமம், நானாதேசி, நகரத்தார் முதலியவற்றிலிருந்து சுங்கம் வசூலிக்கப்பட்டது. வணிகர்களுக்கும் கைத்தொழிலாளர்களுக்கும் விதிக்கப்பட்ட பல வரிகளைப் பற்றிய பல கல்வெட்டுகள் கூறுகின்றன. எகவை, உகவை, ஒட்டச்சு, பாய், தறி, இறை, தட்டாரப் பாட்டம் முதலியவை இத்தகைய வரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வணிகம் வளர்ந்தோங்கிய காலத்தில் வணிகக் குழுக்கள் செல்வாக்குப் பெற்றன. வணிகத்தை மேலும் பெருக்குவதற்கு இவ்வரிகளை நீக்க வேண்டியது அவசியம் என்று அவை உணர்ந்ததன. வரிகளை நீக்குவதற்காகக் கிளர்ச்சி செய்வதற்கு இக்குழுக்கள் தங்களோடு தொடர்புடைய, வணிபப் பொருள் உற்பத்தியாளர்களான கம்மாளர்களையும் அவர்கள் போன்ற கைத் தொழிலாளர்களையும் தங்களோடு இணைத்துக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு நிலவுடைமை வகுப்பினரும் அவர்கள் தங்களோடு இணைத்துக்கொண்ட சாதியினரும் வலங்கைப் பிரிவினர் ஆனார்கள். வணிகக் குழுவினரும் அவர்கள் தங்களோடு சேர்த்துக்கொண்ட சாதியினரும் இடங்கைப் பிரிவினர் ஆனார்கள். வலங்கைப் பிரிவினர் கை வலுத்திருக்கும்போது, மன்னன் அவர்களோடு சேர்ந்துகொண்டு இடங்கைப் பிரிவினரை அடக்குவான். இடங்கைப் பிரிவினர் கைவலுத்திருக்கும்போது, மன்னன் அவர்களுக்குச் சில சலுகைகளை அளிப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;எடுத்துக்காட்டாக, முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் வணிகக் குழுக்கள் இலங்கை, சுமத்ரா, ஜாவா, பர்மா முதலிய நாடுகளோடு வணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டிச் செல்வாக்கும் பெற்று வந்தன. பல போர்களால் மன்னனது கருவூலம் காலியாக இருந்தது. அரசன் வணகர் மீது வரி விதித்து அவர்களது எதிர்ப்பைத் தேடிக்கொள்ள விரும்பபில்லை. ஓர் உபாயத்தைக் கையாண்டு அவர்களின் வருமானத்தைப் பெருக்கித் தனக்கும் பண வருவாய் வர வழி செய்தான். அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சுங்க வரியை அவன் நீக்கிவிட்டான். வணிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்களுக்கு லாபம் உயர்ந்தது. அதில் ஒரு பகுதியை அவர்கள் அரசனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தனர். அரசன் அவர்களது ஆதரவை இவ்வாறு பெற்றான். இச்செய்தி குலோத்துங்கனது கல்வெட்டுகளிலும் ஒட்டக்கூத்தர் பாடிய குலோத்துங்க சோழன் உலாவிலும் காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘சுங்கம் தவிர்த்து இருள் நீக்கி உலகாண்டவன்’&lt;br /&gt;என்பது மாநாடு கல்வெட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;‘புவிராச ராசமனு முதலோன் நாளில்&lt;br /&gt;தவிராத சுங்கம் தவிர்த்தோன்’&lt;br /&gt;என்று குலோத்துங்க சோழன் உலா கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்கள் காரணமாக இடங்கையர், வலங்கையர் நலன்களில் வேறுபாடு இருந்தது. வலங்கையினரில் பயிரிடுவோரும் இடங்கையினரில் தொழிலாளர்களும் மன்னனது சுரண்டலால் பாதிக்கப்பட்டவர்களே. இவ்விரு பகுதியினருக்கும் அரசின்மீது வெறுப்புத் தோன்றுவதுண்டு. அவர்கள் ஒன்று சேர்ந்து மன்னனை எதிர்த்துவிடா வண்ணம் அரசர்கள் அவர்களிடையே பழமையான சுதந்திரங்கள் பற்றிய தகராறுகளை மூட்டிவிட்டுப் பெரும்கலகங்களுக்குத் தூண்டிவிட்டனர். இத்தகைய கலகங்கள் வலங்கை, இடங்கைக் கலகங்களென்றும் இவை மூட நம்பிக்கைகளால் வளர்ந்தனவென்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அது உண்மையல்ல. ஆடுதுறைக் கல்வெட்டு ஒன்று இடங்கை, வலங்கைக் கலகங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதைக் குறிப்பிட்டுக் கோயிற் சாசனங்களின் முகவுரையாசிரியர் கீழ்வருமாறு கூறியுள்ளார்&lt;a title="" style="mso-footnote-id: ftn2" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_ftn2" name="_ftnref2"&gt;[2]&lt;/a&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;கல்வெட்டும், அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் வன்னியர்களும், வேளாளர், பிராமணர் முதலிய நிலச் சொந்தக்காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கி தொண்ணூற்றாறு வகைச் சாதியினருக்கும் இழைத்த அநீதிகளைக் கூறுகிறது. இதேபோல இடங்கை வகுப்பார், அக்காலத்தில் ஏற்கவேண்டி வந்த வரிச் சுமைகளையும், தெரிவிக்கும் கல்வெட்டுகள் நாட்டின் பல பாகங்களிலும் கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இக்கலகங்களுக்குக் காரணம் சிறு சாதிப் பூசல்கள் அல்ல; நிலவுடைமையாளர்கள் தங்கள் நலன்கனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இடங்கையினருக்கு இழைத்த அநீதிகளே இக்கலகங்களுக்குக் காரணம். இடங்கையினர் வலுவற்று இருக்கும்போது அரசனும் இவ்வநீதிகளை ஆதரித்து வந்தான். அவர்கள் ஒன்றுசேர்ந்து வலுப்பெறும்பொழுது அரசன் அவர்களுக்குச் சில சலுகைகளை அளிப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;இடங்கைப் பிரிவுகளிடையே உட்பூசல்களை ஏற்படுத்த அரசனும் நிலவுடைமையாளர்களும் முயன்று வந்தனர். இம்முயற்சிகள் வெற்றியடையும்போது இடங்கை வகுப்பினர் கொடுமையாக அடக்கப்பட்டனர். அவர்கள் கொடுக்க வேண்டிய வரிகளும் கூடின. அனுபவத்தின் மூலம் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்த இடங்கை வகுப்பினர் ஒன்றுகூடி ஒற்றுமையாக இருப்பதற்கு முடிவு செய்ததுண்டு. வாலிகண்டபுரம் கல்வெட்டு இம்முடிவுக்குச் சான்று கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ராஜராஜதேவனுக்கு யாண்டு பதினாறாவது வடகரை நாட்டு வாலிகண்ட புறத்துறையான், திருவாலீசுவரமுடைய நாயனார் திருக்கோயிலில் இடங்கை உள்ளது சகலரும் நிறைவுற நிறைந்துக் குறைவறக்கூடி கல்வெட்டில் வெளியாவது; பல மண்டலங்களிலும், பிராமணரும், சித்திர மேழிப் பெரிய நாட்டார், யாதவர், கொல்லத் தலைவரான மலையமான்களும், காயாங்குடி கண்ணுடை அந்தணரும் பரவர் குலபதபவண நாட்டாரும் பதிணெண் விஷயத்தில், பாணியங்களும் பொற்கோயில் கைக்கோணரும், இடங்கை சகலர்களும், ஒருவருக்கு வந்த நன்மை தீமை அனைவரும் அதாகவும், விலங்கினோமாகில், மாறு சாதிக்கும், கீழ்சாதிக்கும் தாழ்வு செய்தோம் ஆவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப் பின் இக்கல்வெட்டு இம்முடிவுக்கு விரோதமாகப் போகிறவர்கள் கோயிலுக்குச் செலுத்த வேண்டிய அபராதத்தை வரையறுத்துச் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கல்வெட்டு இடங்கை வகுப்பினர் ஒன்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறுவதோடு வலங்கை வகுப்பைச் சேர்ந்த பெரிய நாட்டார், யாதவர், பரவர் முதலியவர்களும் ஒன்று சேர்ந்து தீமைகளை எதிர்க்க வேண்டுமெனவும் கூறுகிறது. இடங்கை வகுப்பினருக்கும் மற்றும் இக்கல்வெட்டில் கண்ட வேறு சாதியினருக்கும், ஒருவருக்கு வந்த நன்மை தீமைகள் எல்லோருக்கும் வந்ததாகக் கருதவேண்டும் என்ற உறுதியை இக்கல்வெட்டின் மூலம் சாதாரண மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசர்கள் இருவகைச் சாதிப் பிரிவுகளையும் முட்டி மோதவிட்டுத் தங்கள் சுரண்டலை நீடிக்கச் செய்த முயற்சிகள் பன்முறை வெற்றி பெற்றன. பலவித இன்னல்களைப் பொதுவில் அனுபவித்த பிறகு, வலங்கைப் பிரிவில் உழைக்கும் சாதியினரும், தீமையை எதிர்க்கவும் நன்மையை வரவேற்கவும் ஒன்றுபடுவோம் என்று உறுதி செய்துகொண்டதைக் குறிக்கும் இக்கல்வெட்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அபூர்வமாகக் கிடைக்கும் இச்சான்றுகளின் மூலம், இடங்கை - வலங்ககைக் கலகங்கள் வெறும் சாதிக் கலகங்கள் அல்லவென்றும், வர்க்க முரண்பாடுகளின் அடிப்படையில் முரண்பட்ட நிலவுடைமை வர்க்கமும் வணிக வர்க்கமும் தம்மோடு இணைத்துக்கொண்ட மக்கட் பிரிவுகளின் கூட்டமைப்புகளே என்றும் முடிவுக்கு வரலாம். இவ்வமைப்புகளில், அடித்தட்டிலுள்ள உழைக்கும் மக்கள் இடங்கை, வலங்கை அமைப்பை விட்டு விலகி நம்மை தீமைகளில் ஒன்றுபட்டு நிற்கச் செய்த முயற்சியும் நமக்குப் புலனாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(இக்கட்டுரை 1960ஆம் ஆண்டை சூன் மாத தாமரை இதழில் (மலர்: 2, இதழ்:7) வெளிவந்தது. மக்கள் வெளியீட்டின் தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள் என்னும் தொகுப்பில் இரண்டாவது கட்டுரையாக இடம்பெற்றுள்ளது)&lt;br /&gt;&lt;a title="" style="mso-footnote-id: ftn1" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_ftnref1" name="_ftn1"&gt;[1]&lt;/a&gt; ‘தாமரை’ மலர் 2 இதழ் 5 (ஏப்ரல் 1960) இல் ‘சோழர் ஆட்சியில் அறப்போர்கள்’ என்ற தலைப்பில் தாம் எழுதிய கட்டுரையைப் பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் இங்குக் குறிப்பிடுகிறார். – டாக்டர் மே. து. ராசுகுமார்.&lt;br /&gt;&lt;a title="" style="mso-footnote-id: ftn2" href="http://www.blogger.com/post-create.g?blogID=5150995232087595379#_ftnref2" name="_ftn2"&gt;[2]&lt;/a&gt; தி. நா. சுப்பிரமணியன், தென்னிந்தியக் கோயில் சாசனங்கள். – டாக்டர் மே.சு. ராசுகுமார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5150995232087595379-3708491332037635196?l=noolatukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://noolatukku.blogspot.com/feeds/3708491332037635196/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5150995232087595379&amp;postID=3708491332037635196&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5150995232087595379/posts/default/3708491332037635196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5150995232087595379/posts/default/3708491332037635196'/><link rel='alternate' type='text/html' href='http://noolatukku.blogspot.com/2009/01/blog-post_7265.html' title='தமிழ் மன்னரும் சாதிப் பிரிவினைகளும்'/><author><name>தளிர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5150995232087595379.post-8764832331500288242</id><published>2009-01-24T02:52:00.001-08:00</published><updated>2009-01-24T03:01:23.586-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மார்க்சியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோழர் ஆட்சி'/><title type='text'>சோழர் ஆட்சியில் அறப் போர்கள்</title><content type='html'>&lt;div align="center"&gt; &lt;a href="http://3.bp.blogspot.com/_qAg6TuYV07Y/SXr0CspowUI/AAAAAAAAAVg/nDmQ8s0BSrQ/s1600-h/10feb-ilakiyam-katturai01.jpg"&gt;  &lt;img id="BLOGGER_PHOTO_ID_5294812639110152514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 175px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_qAg6TuYV07Y/SXr0CspowUI/AAAAAAAAAVg/nDmQ8s0BSrQ/s400/10feb-ilakiyam-katturai01.jpg" border="0" /&gt;&lt;/a&gt;நா.  வானமாமலை&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தமிழ்நாட்டில் நீண்டகாலம் நிலைத்து நின்ற பேரரசு சோழப் பேரரசு ஆகும். அது கி.பி. 846 முதல் 1281 முடிய நிலவியிருந்தது. பல்லவர் கீழ் சிற்றரசனாக இருந்த விஜயாலயன் கி.பி. 846இல் தனி அரசை நிறுவினான். அவனது மகனும் பெயரனும், தொண்டை நாட்டையும், பாண்டிய நாட்டையும் போரில் தோற்கடித்துக் கைப்பற்றினார்கள். அதற்குப் பின் பட்டம் பெற்ற அரிஞ்செயன், சிங்கள நாட்டின் மீது படையெடுத்துச் சென்று போரிட்டான். ராஜராஜன், கங்கை பாடி, நுளம் பாடி, வேங்கை நாடு இவற்றை வென்று சோழ சாம்ராஜ்யத்தை விசாலப் படுத்தினான். அவனது மகன் ராஜேந்திரன் தன் வாழ்நாளில் பெரும்பகுதியைப் போரிலேயே கழித்து இடைத்துறை நாடு, வனவாசி, கோசலம், விராடம், வங்காளம் ஆகிய நாடுகளைக் கைப்பற்றினான். சோழரது படை வலிமை குன்றியவுடன் இந்நாட்டு மன்னர்கள் தாங்களே சுதந்திரமாக ஆட்சி நடத்தத் தலைப்பட்டனர். இராஜேந்திரனுக்குப் பின்பு பட்டமெய்திய மூன்று சோழ மன்னர்கள் தங்களின் முன்னோர்களின் வெற்றிகளை உறுதிப்படுத்தப் பல போர்களில் ஈடுபட்டனராயினும், வட புல நாடுகளை அதிக நாட்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்க முடியவில்லை. கி.பி.1070 முதல் 1120 வரை தமிழ்நாடு முழுவதையும் தெலுங்கு நாட்டின் பெரும் பகுதியையும் ஆண்டு வந்த முதல் குலோத்துங்க சோழ தேவன் வனவாசி, கலியாணபுரம், கன்னியாகுமரி, கோட்டாறு, தென் கலிங்கம், வட கலிங்கம் ஆகிய நாடுகள் மீது போர் தொடுத்து வென்று ஆண்டு வந்தான். அவனது வெற்றிகளின் பயனை அவனது மகன் விக்கிரம சோழனும், அவனது பெயரன் குலோத்துங்க சோழனும் அனுபவித்தார்கள். இராஜேந்திரனுடைய காலத்திற்குப் பின்பு குலோத்துங்க சோழனுடைய காலத்தில்தான் சோழ சாம்ராஜ்யம் அதிகப் பரப்புடையதாய் இருந்தது. முதல் குலோத்துங்கன் கலிங்கத்துப் பரணியின் தலைவன். விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன் மூவரும் ஒட்டக்கூத்தல் பாடிய 'மூவருலா'வின் தலைவர்கள். இரண்டாம் இராஜராஜனுக்குப் பின் பட்டமெய்திய சோழ மன்னர்கள் காலத்தில் வெளிநாட்டு மன்னர்கள் சோழ நாட்டிலும் படையெடுத்து வந்தார்கள். சிற்றரசர்கள் கலகம் விளைவித்தார்கள். பாண்டியர்கள் முத்துச் சலாப வருமானத்தாலும், அராபிய வர்த்தகத்தாலும் தமது படைபலத்தைப் பெருக்கிக் கொண்டு சோழ நாட்டின் மீது படையெடுத்தார்கள். மாறவர்மன் சுந்தர பாண்டியனும், சடைய வர்மன் சுந்தர பாண்டியனும் நடத்திய இறுதிப் போர்களால் சோழ சாம்ராஜ்யம் சரிந்து விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே சோழர் காலத்துச் சரித்திர சுருக்கம். ஒவ்வொரு சோழ மன்னனும், சாம்ராஜ்ய விஸ்தரிப்புப் போர்களில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டு இருக்கிறார்கள். இவ்வாறு பெரும் போர்களை நடத்துவதற்கும் போரிட்டு வென்ற நாடுகளை அடிமைப்படுத்தி வைப்பதற்கும் சோழ மன்னர்கள் பெரும்படைகளை வைத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சோழர் கல்வெட்டுகளில் மூவகை நிலைப்படைகளைக் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. வலங்கைப் படை, இடங்கைப் படை, மூன்று கை மகாசேனை என்ற மூன்று கை மகாசேனை என்ற மூன்று படைப்பிரிவுகள் இருந்தன என்று கல்வெட்டுக் குறிப்புகளால் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படைகளுக்கு வேண்டிய உடை, உணவு முதலியவற்றையும், படைக் கலங்களையும், யானை, குதிரை முதலிய ஊர்திகளையும் சேகரித்துத் தருவது மன்னனது கடமையாக இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் படைவீரர்களது குடும்பங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மன்னனே ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தது. ஏனெனில் அக்காலத்தில் போர்வீரர்களுக்கு மாத ஊதியம் அளிப்பதில்லை. நிலங்களையோ, நிலங்களில் வருமானத்தில் வரும் ஒரு பகுதியையோ, மானியமாகவும், கடமையாகவும், அக்குடும்பங்களுக்கு அளிப்பதுண்டு. கோயில் வருமானத்தின் ஒரு பகுதியைப் படைகளுக்கு அளித்ததாகவும், சில கோயில்களைப் படைகளின் பாதுகாப்பில் விட்டதாகவும், சில சாசனங்கள் கூறுகின்றன. உதாரணமாகச் சில சாசனச் செய்திகளைக் கீழே தருவோம்:&lt;br /&gt;திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன் மகாதேவிக் கோவிலில் கல்வெட்டு ஒன்று மூன்று கை மகாசேனையார், பக்த வத்ஸல ஸ்வாமி கோவில் தர்மங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறது. இது முதல் குலோத்துங்க சோழன் காலத்துக் கல்வெட்டு.&lt;br /&gt;பிரமதேசம் என்று பெயர் வழங்கும் திருவாலீச்வரம் கல்வெட்டு ஒன்று அவ்வூர்க் கோவிலையும் - ஸ்ரீபண்டாரத்தையும் (பொக்கிஷம்) தேவ கன்மிகளையும், (கோவில் ஊழியர்கள்) மூன்று கை மகாசேனை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறது. இக்கல்வெட்டு முதல் இராஜேந்திரச் சோழனது மகன் பாண்டிய நாட்டில் மண்டலேச்வரனாக ஆண்ட காலத்தில் வெட்டிக் கொடுத்தது.&lt;br /&gt;இச்சான்றுகள் லட்சக்கணக்கான போர்வீரர்களது ஊதியம் கோவில் வருமானத்திலிருந்து கொடுக்கப்பட்டது என்பதைக் காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால், சோழர் காலத்தில் கோயில்களின் வருமானத்தைப் பெருக்க வழிவகைகள் செய்திருக்க வேண்டும். சோழர் காலத்து முன்பு கோவில்கள் மிகச் சிறியவையாயிருந்தன. பல்லவர் காலத்துக் கோவில்கள் மிகச் சிறிய குடைகோயில்களே. அவற்றை மாமல்லபுரத்திலும் திருக்கழுக்குன்றத்திலும் காணலாம். அவற்றிற்கு நிரந்தர வருமானமோ சொத்தோ இருந்ததில்லை. ஆனால் சோழர் காலத்தில் பிரம்மாண்டமான கற்கோயில்கள் எழுப்பப்பட்டன. ராஜராஜன் பிருகதீசுவரர் ஆலயம் கட்டினான். ராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தில் அதே போன்றதொரு கோயில் கட்டினான். ஊருக்கு ஊர் கோவில்கள் தோன்றின. இதனைப் பெரிய புராணத்திலுள்ள வரலாறுகளிலிருந்து அறியலாம். கல்வெட்டுச் சான்றுகளும் ஏராளமாக உள்ளன. இக்கோயில்களைக் கட்ட, போரில் சிறைப்பட்ட யுத்தக் கைதிகளையும் போரில்லாத காலத்தில் உள்நாட்டு மகாசேனைகளையும் ஈடுபடுத்தினார்கள் என்று தெரிகிறது. இக்கோயில்களுக்கு ஏராளமான நிலங்களை சர்வ மானியமாக சோழ அரசர்கள் விட்டார்கள். இதற்குச் சில சான்றுகள் கீழே தருவோம்:&lt;br /&gt;"ராஜராஜன் பெரியகோவில் பணிகள் நடைபெற 35 கிராமங்களை சர்வமானியமாக விட்டதாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. அவற்றுள் நான்கு சிற்றூர்கள் 500 முதல் 1000 ஏக்கர் பரப்பளவுள்ளவை; மூன்று சிற்றூர்கள் 300 முதல் 400 ஏக்கர் பரப்பளவுள்ளவை. ஆறு 100 முதல் 200 வரை; மற்றும் ஆறு 25 முதல் 50 வரை; இரண்டு சிற்றூர்கள் 25 ஏக்கருக்கும் குறைவு" (சோழர் வரலாறு, மு.இராசமாணிக்கனார்).&lt;br /&gt;கல்வெட்டுக்களில், கிராமங்களில் பயிருள்ள நஞ்செய் நிலம் முழுவதையும் கோயில் காணியாக்கிய செய்திகள் காணப்படுகின்றன. இவற்றுள் புஞ்செயை உழவர்களுக்கு வெள்ளான் வகை(சொந்த நிலம்)யாக விடுத்து, அது நஞ்செயாகத் திருத்தினால் கோயில் காணியாக எடுத்துக்கொண்ட விவரங்களையும் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. உதாரணமாக கீழ் வரும் கல்வெட்டைப் பார்க்கலாம்:&lt;br /&gt;"ஸ்வஸ்தி ஸ்ரீ ஸ்ரீமான் ராஜாதிராஜ ஸ்ரீ வீர நாராயண சோழ தேவர்க்கு செல்லா நின்றயாண்டு ஒன்பதாவது பரஞ்சரா வள்ளியில் மகாதேவர் நட்டூரமர்ந்தார்க்கும். (கோவில் மூர்த்தியின் பெயர்) பல நிமந்தப் படிக்கும், தீபாராதனைப் படிக்கும் ஊரார் பிடாரியூர்க்குப் போகும் வழிக்குக் கீழ்பாகம் கொடுத்தோம். இதுக்கு நிலம் அரைக்கிடவுக்காக, பரஞ்சரா வள்ளியில் நிலத்தில் புஞ்செய் நீக்கி, நஞ்செய் கொடுத்தோம். இந்த நிலம் தேவதானமாக உழுது மேல் வாரம் மேற்கொண்டு படித்தரம் தீபாராதனை நடந்து வருகிறதற்காக"&lt;br /&gt;&lt;br /&gt;இவை போன்ற ஆயிரக் கணக்கான கல்வெட்டுக்களை தமிழ் நாட்டில் கோயிலுள்ள ஊர்களில் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள். இக்கல்வெட்டுக்களின் மூலம், சோழர்கள் அதற்கு முன்பிருந்த நிலவுடைமை முறையை மாற்றினார்கள் என்பது புலனாகிறது. எவ்வாறு மாற்றினார்கள் என்பதறிய அவர்கள் காலத்தில் எத்தகைய நிலவுடைமை முறை நிலவியது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நிலவுடைமை அக்காலத்தில் நான்கு வகையாகவிருந்தது.&lt;br /&gt;வெள்ளான் வகை: இது சொந்த நிலம். இந்நிலங்களில் ஒரு பகுதி "உழுவித்துண்பார்" என்ற உழவர்களிடமிருந்தன.&lt;br /&gt;தேவதானம்: இந்நிலங்கள் கோயிலுக்கு உடமையாக இருந்தன. அவற்றின் மேற்பார்வை சபையாரிடமிருந்தன. அவர்கள் பெரும்பாலும் நிலவுடைமையாளர்களே. சிறுபான்மை படையாரிடம் இருந்தன.&lt;br /&gt;பிரமதேயம்: இந்நிலங்கள் பிராமணர்களுக்கு உடமையாக இருந்தன.&lt;br /&gt;ஜீவிதம்: இந்நிலங்கள், கோயில் பணிசெய்வார்க்கு இனாம் நிலங்களாக ஆயுள் காணியாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சோழர் காலத்தில் நிலவுடைமை முறைகளில் செய்த மாறுதல்களின் தன்மையைக் கல்வெட்டுக்களின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. வெள்ளாளன் சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமையைப் பறித்து கோயில் தேவதானமாகவும் இறையிலி நிலமாகவும் மாற்றினார்கள். உழவர்கள் தங்கள் உரிமைகளை இழந்தார்கள். உழுதுண்போரின் நிலங்களில் பலவற்றைப் பிரமதேயமாக்கினார்கள். ஆகவே நிலவுடைமை கோயிலுக்கோ, கோயில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திய மேல் வர்க்கங்களுக்கோ மாற்றப்பட்டது. இதனால் உழுதுண்போர் நிலை தாழ்ந்தது. இது மட்டுமல்ல; போர்களுக்கும் கோயில் செலவுகளுக்கும் அரசனது அரண்மனை ஆடம்பரச் செலவுகளுக்கும் சாதாரண மக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டன. இவ்வரிகளை வசூலிக்கும் உரிமை மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட ஊர்ச்சபைகளிடமே விடப்பட்டிருந்தன. அவர்கள் தங்கள் உடைமைகளுக்கும் நலன்களுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் வரியையும் கடமைகளையும் இறைகளையும் வசூலித்தார்கள். வரி கொடுக்க முடியாத ஏழைகளைக் கொடுமைப்படுத்தினார்கள். வரி கோயிலுக்கென வசூலிக்கப்பட்டதால் வரி கொடாதவர்களுக்குச் 'சிவத் துரோகி' என்ற பட்டம் சூட்டி நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள் அல்லது நிலத்தில் ஒரு பகுதியை விற்று 'தண்டம்' என்ற பெயரால் கோயிலுக்கு அளித்தார்கள். இத்தகைய ஒரு சுரண்டல் முறையை படைகளின் பாதுகாப்போடும் மதக் கொள்கைகளின் அனுசரணையோடும் சோழ மன்னர்கள் பாதுகாத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சுரண்டல் முறைகளை மக்கள் எப்பொழுதும் சகித்துக்கொண்டிருந்தனர் என்று சொல்ல முடியாது. வாழ்க்கைத் துயரங்கள் அவர்களை ஒற்றுமைப்படுத்தின. கொடுமை அளவுமீறும் போது அவர்கள் போராடினர். அப்போராட்டங்களைப் பற்றி நாம் இதுவரை சோழர் வரலாறுகளில் வெளிவந்துள்ள நூல்களில் காண முடியாது. ஏனெனில் அவை மன்னர் வரலாறுகளேயன்றி மக்கள் வரலாறுகளல்ல. அப்போராட்டங்கள் வர்க்கப் போராட்டங்கள். இன்று நடைபெறும் உழவர், தொழிலாளர்களின் அறப்போர்களின் முன்னோடிகள். வரலாற்றை இயக்கும் தலைமையான சக்தி அவை. அவற்றுள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதும் அப்போர்களின் முறைகளை எடுத்துக் காட்டுவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்காலத்தில் அநீதிகளை எதிர்த்து உண்ணாவிரதம் ஒரு போர் முறையாகக் கையாளப்படுகிறது. இது உயிரைப் பணயம் வைத்து மக்களை அநீதிகளுக்கு எதிராகத் திரட்டும் முயற்சி. இது போலவே உயிரைப் பணயம் வைத்து அரசனது அநீதிகளை எதிர்த்து மக்கள் உணர்வைத் திரட்டிய நிகழ்ச்சிகளைப் பற்றி அபூர்வமாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சாவூரில் புஞ்சை என்ற கிராமத்தில் ஓர் கல்வெட்டு அகப்பட்டது. அதன் விவரம் வருமாறு:&lt;br /&gt;அக்கோயிலில் பணியாட்கள் சிலர் இருந்தனர். அவர்களுக்கு ஜீவிதமாக அளிக்கப்பட்ட நிலத்தை ஊர்ச் சபையார் கைக்கொண்டு வேலையாட்களை வெறியேற்றினர். அவர்கள் அதிகாரியிடம் முறையிட்டுப் பார்த்தனர். பயனில்லை. அவவனீதியை எதிர்க்க அவர்கள் கோயில் முன் தீ வளர்த்து தீயிலிறங்கி உயிர்த்தியாகம் செய்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல தங்கள் உரிமையை நிலைநாட்ட, உழைக்கும் மக்கள் வீரமாக உயிர் நீத்த செய்திகள் அபூர்வமாகக் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன. தங்களுடைய உரிமைக்கு மக்கள் ஆதரவைத் திரட்டவும் மன்னனது கவனத்தை ஈர்க்கவும் சிலர் ஊர்க் கோபுரத்தின் மேலேறி கீழே விழுந்து உயிர் நீத்த செய்திகள் சில கோயில் சாசனங்களிலிருந்து தெரிய வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்த்தவும் பணி செய்யவும் தேவரடியார்கள் இருந்தனர். அவர்களில் இரு வகையினர் உண்டு. அரச குடும்பம், வணிகர் குடும்பம், அதிகாரிகள் குடும்பம் ஆகியவற்றைச் சேர்ந்த பெண்கள் பெருஞ் செல்வத்தோடு கோயில் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். இவர்கள் பெயரிலிருந்து இவர்களது சமூக நிலையை அறியலாம். அதிகாரிகளின் பட்டங்கள் இவர்கள் பெயரோடு சேர்த்து வழங்கப்படும். உதாரணமாக, நக்கன் ஸ்ரீதேவி, சோழ மாணிக்கம், மாசாத்து பூவேந்திய சோழ மாணிக்கம் என்ற பெயர்கள் பட்டம் சேர்த்து வழங்குபவை. இவர்கள் கொணர்ந்த செல்வங்களால் கோயில்களுக்கு நிலங்கள் வாங்கி அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில உரிமைகள் இத்தேவரடியார்க்கு உண்டு. தேவரடியாரில் மற்றோர் வகையினர் ஏழைப் பெண்கள், பஞ்ச காலத்தில் நிலமிழந்தவர்களும் வெள்ளக் காலத்தில் நிலமிழந்தவர்களும் தங்களுடைய பெண்களைக் கோயில்களுக்கு விற்றுவிடுவார்கள். அப்பெண்களுக்கென்று கொடுக்கப்படும் விலையை நிலமாக அவர்களுக்கே ஜீவிதமாகக் கொடுப்பார்கள். அப்பெண்களின் தந்தையோ தமையனோ அல்லது உறவினனோ அதனைக் காணியாக அனுபவிப்பர். இவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகும்போது கோவில் செலவி அதிகமாகும். அதனைக் குறைக்கச் சபையாரும் அரசனும் முயற்சி செய்வார்கள். அவர்களுடைய ஜீவிதங்களைப் பறித்து கோயில் செலவில் உணவு மட்டும் அளிக்க முற்படுவார்கள். அச்சமயங்கள் உழவர்களாயிருக்கும் தேவரடியாரின் உறவினர்கள் நிலமிழப்பார்கள். இக்கொடுமையை எதிர்த்து நடந்த ஒரு நிகழ்ச்சியை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. தேவரடியாரது ஜீவித நிலங்களைக் கைப்பற்றிக் கொள்ளும்படி நாடாள்வனான சோழ மன்னனது அதிகாரி கட்டளை அனுப்பினான். சபையார் கட்டளையை நிறைவேற்றினர். இதனை எதிர்த்து உழவர்கள் போராட்டம் தொடங்கினர். அவர்களை ஆதரித்து ஏழைத் தேவரடியாரான 'திருவீதிப் பணி செய்வாரும்' திரண்டனர். தங்கள் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவைத் திரட்ட ஒரு தேவரடியாள் முன் வந்தாள். அவள் பெயர் சதுரி மாணிக்கம். அவள் தனது வர்க்கத்தாரின் உரிமையை நிலைநாட்டக் கோபுரத்தின் மேலேறி விழுந்து உயிர் விட்டாள். நாட்டார் கட்டளையை எதிர்த்தனர். சபையார் கட்டளையை மாற்ற அரசனிடம் விண்ணப்பித்தனர். கட்டளையை மாற்ற அரசன் திருமுகம் (ஓலை) அனுப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அநியாயமான வரிகளை எதிர்க்க மக்கள் வரி கொடா இயக்கம் நடத்தியதும் உண்டு. அப்போர் முறை மேற்கூறிய தனிப்பட்ட தியாகங்களால் மக்கள் உணர்வைத் திரட்டிய பின் நடத்தப்படும். அதற்கு ஓர் உதாரணம் ஆடுதுறைக் கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது. அதிகாரிகளின் உதவியுடன் வன்னியர்களும் வேளாளர், பிராமணர் முதலிய நிலச் சொந்தக்காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய 96 வகைச் சாதியினருக்கு இழைத்த அநீதிகளைக் கல்வெட்டு கூறுகிறது. இதே போல இடங்கை வகுப்பார் அந்தக் காலத்தில் ஏற்கவேண்டி வந்த வரிச் சுமைகளையும் தெரிவிக்கும் கல்வெட்டுகள் நாட்டின் பல பாகங்களிலும் கிடைத்துள்ளன. ஆவணியிலிருந்து கிடைத்துள்ள கல்வெட்டு முக்கியமானது. அரசன் ஆணைக்கிணங்கக் கூடிய பெரிய விஷயத்தாரின் முடிவை அரு தெரிவிக்கிறது. நிகரிலிச் சோழ மண்டலத்து 78 நாடுகளும் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து 48000 பூமியும் உள்ளிட்ட நாடுகளில் சோழ வமிசம் தோன்றிய நாள் முதல் எருமை முதலியவைகளுக்கு வரி விதிக்கப்பட்டதில்லை என்றும் அதனால் அதிகாரியான சோழ மூவேந்த வேளான் விதித்த இவ்வரியைக் கொடுக்க வேண்டியதில்லை என்றும் முடிவுகட்டினார்கள். அன்றி 18 விஷயங்களிலும் உள்ளவர்கள் கொடுக்க வேண்டிய வரி விகிதத்தையும் நிச்சயித்து நிர்ணயித்தார்கள். இதே சாசனத்தின் பிரதி உத்தனூரிலிருந்து கிடைத்துள்ளது. (கோயில் சாசனங்கள் முன்னுரை)&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய விஷயத்தார் என்பவர் நாட்டாரின் பிரதிநிதிகள். மக்களின் கிளர்ச்சி வலுப்படவே மேல் வர்க்கப் பிரதிநிதிகளைக் கொண்ட சபைகள் கூட மக்களின் கோரிக்கைகளை ஆதரித்தன. இந்நிகழ்ச்சி முதல் குலோத்துங்க சோழன் காலத்தில் நடந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயங்களில் ஆட்சியின் அநீதியையும் நில உடைமையாளரின் கொடுமையையும் எதிர்க்க மக்கள் ஆயுதம் தாங்கிப் போராடியுமிருக்கிறார்கள். அரசனது ஆணைகளும் சபையாரின் முடிவுகளும் கோவில் சுவர்களில் எழுதி வைக்கப்பட்டிருந்ததால் இம்முடிவுகளை எதிர்ப்பதற்கு அடையாளமாகச் சில சமயங்களில் மக்கள் கோவில் சுவர்களை இடித்து கல்வெட்டுகளை அழித்திருக்கிறார்கள். அநியாயமான நிலப் பரிவர்த்தனைகள், கோயில் மூர்த்தியின் பெயராலோ சாண்டேசுவரா பெயராலேயோ செய்யப்பட்டிருந்ததால் விக்கிரகங்களைப் புரட்சிக்காரர்கள் உடைத்திருக்கிறார்கள். அக்கல்வெட்டுக்கள் மன்னர் ஆணையால் வெட்டப்பட்டதால் கலகங்களின் காரணங்கள் எவை என்பதனைக் குறிப்பிடமாட்டா. ஆனால் கலகங்களால் கல்வெட்டுகள் அழிந்துவிட்டதையும் மூல பத்திரங்கள் அழிந்ததையும் குறிப்பிட்டு புதிய பத்திரங்கள் பிறப்பித்ததை மட்டும் குறிப்பிடும் இக்கலகங்கள் வர்க்கப் போராட்டமே என்பதும் உறுதி. இத்தகைய கல்வெட்டுகள் மிகச் சிலவே கிடைக்கின்றன. உதாரணத்துக்கு உடையாளூர் சாசனத்தையும் தலைச் செங்காட்டுக் கல்வெட்டையும் குறிப்பிடலாம். மூன்றாம் ராஜராஜனது 5ஆம் ஆண்டு கல்வெட்டு, அதற்கு முன் நடந்த கலகங்களால் மூலபத்திரங்கள் அழிந்து போயினமையால் நான்காம் ஆண்டு அளவில் உள்ள அனுபோகப் பற்றொழுகை ஒட்டி புதிய பத்திரங்கள் வழங்க அரசன் ஆணையிட்டதைக் கூறுகிறது. (உடையாளூர்) இதுபோன்றே மூன்றாம் ராஜராஜனது 19ஆம் ஆண்டுக் கல்வெட்டு, ஐந்தாம் ஆண்டில் நடந்த கலகங்களால் பழைய கணக்குகள் அழிந்ததால் அனுபோகப்படி புதிய ஆதாரச் சீட்டுகள் பிறப்பிக்கப்பட்டன என்று கூறுகிறது (தலைச் செங்கோடு சாசனம்). இக்கலகங்களில் நிலவுடைமையைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் ஆதாரச் சீட்டுகளுமே மக்கள் கோபத்துக்கு இலக்காயின என்பது குறிப்பிடத்தக்கது. "அவை நம் வாழ்க்கையை அழிக்கும் சின்னங்கள். அவற்றை அழித்து நமது உரிமையை நிலைநாட்டுவோம்." என்று பழந்தமிழ் உழவர்கள் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கிளர்ச்சிகளாலும் புரட்சிகளாலும் சில சலுகைகள் உழவர்களுக்குக் கிடைத்தன. ஆனால் கிளர்ச்சிக்காரர்கள் கடுமையாக அடக்கப்பட்டார்களென்றும் தெரிகிறது. மேற்குறித்த புரட்சிகளுக்குப் பின் வரி கழித்ததையும் தேவரடியார் முதல் கொள்ளாதபடி ஆணை பிறப்பித்ததையும் நிலங்களை உரியவர்களுக்கு அளித்ததையும் பற்றி சாசனங்கள் கூறுகின்றன. இக்கிளர்ச்சிகள் இன்றைய வர்க்கப் போராட்டத்தில் முதல் சுடர்.&lt;br /&gt;&lt;br /&gt;(இக்கட்டுரை 1960ஆம் ஆண்டைய ஏப்ரல் மாத தாமரை இதழில் (மலர்:2, இதழ்:5) வெளிவந்தது. என்சிபிஎச் வெளியிட்ட தமிழர் வரலாறும் பண்பாடும் என்னும் நூலில் மூன்றாவது கட்டுரையாக இடம்பெற்றுள்ளது.) &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5150995232087595379-8764832331500288242?l=noolatukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://noolatukku.blogspot.com/feeds/8764832331500288242/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5150995232087595379&amp;postID=8764832331500288242&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5150995232087595379/posts/default/8764832331500288242'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5150995232087595379/posts/default/8764832331500288242'/><link rel='alternate' type='text/html' href='http://noolatukku.blogspot.com/2009/01/blog-post_24.html' title='சோழர் ஆட்சியில் அறப் போர்கள்'/><author><name>தளிர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_qAg6TuYV07Y/SXr0CspowUI/AAAAAAAAAVg/nDmQ8s0BSrQ/s72-c/10feb-ilakiyam-katturai01.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry></feed>
